டெனிசு முக்வேகி
டெனிசு முக்வேகி (Denis Mukengere Mukwege, /mʊkˈweɪɡi/;[1] பிறப்பு: மார்ச் 1, 1955)[2][3] என்பவர் காங்கோவைச் சேர்ந்த பெண்நோயியலாளரும், மனித உரிமை செயற்பாட்டாளரும் ஆவார். இவர் புக்காவு நகரில் பான்சி மருத்துவமனையை ஆரம்பித்து, அங்கு ஆயுதக்குழுக்களால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட காங்கோ பெண்களுக்கு சிகிச்சையளிப்பதில் ஈடுபட்டுள்ளார்.[4] இரண்டாவது காங்கோ போர்க் காலத்தில் (1998 - 2003) இருந்து பாதிப்புக்குள்ளான ஆயிரக்கணக்கான பெண்களுக்கு ஒரு நாளைக்குக் குறைந்தது 10 சத்திர சிகிச்சைகள் வரை இவர் இங்கு மேற்கொண்டுள்ளார்.[4] வன்கலவியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளிப்பவர்களில் இவர் உலகில் முதன்மையானவராகக் கருதப்படுகிறார்.[5]
டெனிசு முக்வேகி Denis Mukwege | |
---|---|
2014 இல் முக்வேகி | |
பிறப்பு | 1 மார்ச்சு 1955 புக்காவு, பெல்ஜிய காங்கோ |
தேசியம் | காங்கோ மக்களாட்சிக் குடியரசு |
படித்த கல்வி நிறுவனங்கள் | புருண்டி பல்கலைக்கழகம் ஆங்கர்சு பல்கலைக்க்ழகம் |
பணி | பெண்நோயியலாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1983-இன்று |
விருதுகள் | ரைட் லவ்லிவுட் விருது டைம் 100 சாகரவ் பரிசு செவாலியே விருது அமைதிக்கான நோபல் பரிசு (2018) |
2018 ஆம் ஆண்டில், இவருக்கும், ஈராக்கைச் சேர்ந்த நாதியா முராத் என்பவருக்கும் "போர் மற்றும் ஆயுத மோதல்களில் பாலியல் வன்முறைகளை ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு எதிரான அவர்களின் முயற்சிகளுக்காக" அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[6]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- பொதுவகத்தில் டெனிசு முக்வேகி தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.