2018 இல் இலங்கை
| |||||
பத்தாண்டுகள்: | |||||
---|---|---|---|---|---|
இவற்றையும் பார்க்க: |
பொறுப்பு வகித்தவர்கள்
- அரசுத்தலைவர் – மைத்திரிபால சிறிசேன
- பிரதமர் – ரணில் விக்கிரமசிங்க, (அக்டோபர் 26 முதல்) மகிந்த ராசபக்ச
- தலைமை நீதிபதி – பிரியசாத் டெப்
நிகழ்வுகள்
சனவரி 2018
- சனவரி 23 – 2018 காற்பந்து உலககோப்பையின் அதிகாரபூர்வமான வெற்றிக் கிண்ணம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு கொழும்பில் 2 நாட்களுக்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. 2018 பிஃபா உலகக்கிண்ணத்தின் சுற்றுப் பயணம் இலங்கையில் இருந்து ஆரம்பித்து 52 உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. வரலாற்றில் முதல்தடவையாக இக்கிண்ணம் இலங்கையில் இருந்து சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கின்றது.[1][2]
பெப்ரவரி 2018
- பெப்ரவரி 4 – இலங்கையின் 70வது சுதந்திர நாள் கொண்டாடப்பட்டது.[3]
- அர்ஜுன் அலோசியசு, காசுன் பாலிசேன ஆகியோர் கருவூல பத்திர ஊழல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டனர்.[4][5]
- பெப்ரவரி 10 – 2018 இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 8293 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இலங்கை முழுவதும் நடைபெற்றது.[6]
- பெப்ரவரி 23 – 40 ஆண்டுகளுக்குப் பின்னர் முதற்தடவையாக இலங்கையில் பெரும் செலவில் தயாரிக்கப்பட்ட கோமாளி கிங்ஸ் என்ற முழுநீளத் தமிழ்த் திரைப்படம் நாடெங்கும் 50 அரங்குகளில் திரையிடப்பட்டது.[7]
- பெப்ரவரி 27 – சிங்கள-முசுலிம் கலவரம் அம்பாறை நகரில் ஆரம்பமானது. அம்பாறை முசுலிம்களின் உணவகங்களில் வேதிப் பொருட்கள் சேர்க்கப்பட்டன என வதந்தி பரவியதை அடுத்து பள்ளிவாசல்கள், உணவகங்கள் சிங்களவர்களினால் தாக்கப்பட்டன.[8]
மார்ச் 2018
- மார்ச் 2 –முசுலிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் கண்டி மாவட்டம் திகன பகுதில் ஆரம்பித்து கண்டியின் பல பகுதிகளுக்கும் பரவியது. இலங்கையில் அவசரகாலச் சட்டம் 10 நாட்களுக்கு அமுல் படுத்தப்பட்டது.[9]
- மார்ச் 6 – 2018 நிதாகஸ் கோப்பை மூன்று நாடுகள் பங்குபற்றும் துடுப்பாட்டப் போட்டி ஆரம்பமானது.
ஏப்ரல் 2018
- ஏப்ரல் 4 – பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 46 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது. எதிராக 122 வாக்குகளும், ஆதரவாக 76 வாக்குகளும் கிடைத்தன. ஐக்கிய தேசிய முன்னணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிராகவும், கூட்டு எதிர்க்கட்சியும் சுதந்திரக் கட்சியின் 15 பேரும், மக்கள் விடுதலை முன்னணியும் ஆதரவாக வாக்களித்தன.[10]
- ஏப்ரல் 5 – மட்டக்களப்பு மாநகரசபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தியாகராஜா சரவணபவன் முதல்வராகவும், க. சத்தியசீலன் பிரதி முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[11]
மே 2018
- மே 18 – முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலும், உலகில் தமிழர்கள் வாழும் பல நாடுகளிலும் நினைவுகூரப்பட்டது. வட மாகாண சபை, மற்றும் மாணவர்கள் ஏற்பாடு செய்த முக்கிய நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. வட மாகாண முதல்வர் சி. வி. விக்னேஸ்வரன் ஈகைச்சுடர் ஏற்றி உரையாற்றினார்.[12][13][14]
- மே 23 – மே 19 முதல் இலங்கையில் பெய்து வரும் கனத்த மழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் தெற்கு, மேற்கு, மத்திய மாவட்டங்களில் 13 பேர் உயிரிழந்தனர், 100,000 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.[15][16][17]
ஆகத்து 2018
- ஆகத்து 26: ஆண்களுக்கான 2018 கேரம் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை இலங்கை வென்று முதல் தடவையாக உலக்கோப்பையைக் கைப்பற்றியது.[18]
- ஆகத்து 27: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சனாதிபதி செயலணிக் கூட்டத்தில் பங்குபற்றியது.[19]
- ஆகஸ்ட் 30 - காணமல் போனோர் சங்கம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.[20]
செப்டம்பர் 2018
- செப்டம்பர் 5:
- கிழக்குப் பல்கலைக்கழக படுகொலைகளின் 28-ஆம் ஆண்டு நினைவு நாள் வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தில் நினைவுகூரப்பட்டது.[21]
- அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் தலைமையில் கொழும்பில் கூட்டு எதிரணியினரின் “ஜனபலய கொலம்பட்ட” போராட்டம் இடம்பெற்றது.[22][23]
- காணாமல் போணோர் பற்றிய இடைக்கால அறிக்கை சனாதிபதியிடம் கையளிப்பு.[24]
- ஐக்கிய தேசியக் கட்சியின் 72-வது நிறைவுநாள் கொண்டாடப்பட்டது.[25]
அக்டோபர் 2018
- அக்டோபர் 21:
- வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தார்.[26]
- அக்டோபர் 24:
- வட மாகாணசபையின் முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார்.[27]
- 1வது வட மாகாண சபையின் ஐந்தாண்டு ஆயுட்காலம் முடிவடைந்ததை அடுத்து மாகாண சபை கலைக்கப்பட்டு, ஆளுநர் ரெஜினால்ட் குரேயின் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது.[28]
- அக்டோபர் 26:
- அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ரணில் விக்கிரமசிங்கவின் நல்லாட்சி அரசில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது.[29]
- அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து அகற்றி, முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவை புதிய பிரதமராக நியமித்தார்.[30]
- புதிய பிரதமர் ராசபக்சவின் ஆதரவாளர்கள் இரண்டு அரசத் தொலைக்காட்சி நிலையங்களை முற்றுகையிட்டனர். இதனால் அந்நிலையங்களின் தொலைக்காட்சி சேவைகள் சில மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன.[29]
- அக்டோபர் 28:
- இலங்கை பெட்றோலியக் கூட்டுத்தாபனத்தில் தலையகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பு ஊழியர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் கொல்லப்பட்டார், மேலும் இருவர் காயமடைந்தனர். இதனை அடுத்து, ரணதுங்க காஅல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.[31]
நவம்பர் 2018
- நவம்பர் 9:
- மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்து, 2019 சனவரி 5 இல் புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள் நடைபெறும் என வர்த்தமானி மூலம் அறிவித்தார்.[32][33][34]
- ரங்கன ஹேரத் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் இருந்து இளைப்பாறினார். இடக்கை சுழற்பந்து வீச்சாளரான இவர் 433 தேர்வி இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார்.[35]
இறப்புகள்
- பெப்ரவரி 18 – கந்தையா நீலகண்டன், வழக்கறிஞர், இந்து மாமன்றத் தலைவர் (பி. 1947)[36]
- மார்ச் 14 – வசந்தா வைத்தியநாதன், (பி. 1937)[37]
- ஏப்ரல் 29 – லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், திரைப்பட இயக்குநர் (பி. 1919).[38]
மேற்கோள்கள்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்