வை. கோவிந்தன்

தமிழ் பதிப்பாளர்

சக்தி வை. கோவிந்தன் ஒரு தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இதழியலாளரும் எழுத்தாளரும் ஆவார். கோவிந்தன் 'சக்தி அச்சகம்' என்ற அச்சகத்தை நிறுவி, இதழ், மலர், பதிப்பகம் ஆகியவற்றை உருவாக்கியதால் 'சக்தி வை. கோவிந்தன்' என அழைக்கப்படுகிறார். காந்தியக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட இவர் 'தமிழ் பதிப்புலகின் தந்தை' எனப் புகழப்படுகிறார். குழந்தை எழுத்தாளர் சங்கம் என்னும் சங்கத்தை நிறுவி அதன் தலைவராகச் சிறிது காலம் பணியாற்றியவர்.[1]

சக்தி வை. கோவிந்தன்
தமிழ்ப் பதிப்புலகின் தந்தை
தமிழ்ப் பதிப்புலகின் தந்தை
பிறப்பு(1912-06-12)சூன் 12, 1912
இராயபுரம், புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இறப்புஅக்டோபர் 16, 1966(1966-10-16) (அகவை 54)
சென்னை
தொழில்பதிப்பாளர்
தேசியம்இந்தியர்
கல்விஎட்டாம் வகுப்பு

இளமைக்காலம்

சக்தி அச்சகத்தின் விளம்பரம்

கோவிந்தன் 12-6-1912ஆம் நாள் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள இராயபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தார். உள்ளூரிலேயே எட்டாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் பர்மாவில் வணிகம் செய்துகொண்டிருந்த தன் தந்தைக்கு உதவுவதற்காகப் பர்மாவிற்குச் சென்றார். அங்கு தந்தையின் தேக்கு மர ஆலையிலும் செட்டிநாடு பாங்கிலும் வேலை செய்தார். வட்டிக்குப் பணம் கொடுத்து, மக்களைக் கசக்கிப் பிழிந்து அப்பணத்தைத் திரும்பப் பெறும் வழக்கம் கோவிந்தனுக்குப் பிடிக்கவில்லை. எனவே 1934ஆம் ஆண்டில் தன்னுடைய ஊருக்குத் திரும்பினார். குடும்ப வறுமையின் காரணமாகக் கோவிந்தன் அவர்தம் பங்காளியான வைரவன் செட்டியார், முத்தையாச்சி இணையருக்குத் தத்துக் கொடுக்கப்பட்டார்.[2][3]

அச்சகமும் இதழ்களும்

கோவிந்தன், 1935ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சென்னைக்கு வந்தார். அங்கே தனது கையிலிருந்த ஒரு இலட்சத்தைக் கொண்டு சக்தி என்னும் அச்சகத்தையும் 1935ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுத்தானந்த பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு சக்தி என்னும் திங்கள் இதழையும் தொடங்கினார்.[2] இந்த இதழ் 1950ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் வரை தொடர்ந்து வெளிவந்தது. பின்னர் சற்று இடைவெளிக்குப் பின்னர், 1953 ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கி 1954ஆம் ஆண்டில் சில மாதங்கள் வரை இவ்விதழ் வெளிவந்தது.[4] இவ்விதழின் ஆசிரியராக யோகி. சுத்தானந்த பாரதியாருக்குப் பின்னர், தி. ஜ. ரங்கநாதன், சுப. நாராயணன், கு. அழகிரிசாமி, விஜய பாஸ்கரன் ஆகியோர் பணியாற்றினர். இறுதியில் வை. கோவிந்தனே ஆசிரியர் பொறுப்பில் இருந்தார்.[2]


சக்தி மாதம் ஒரு நூல் வரிசையில் வெளிவந்த நூலொன்றின் அட்டைப்படம்
சக்தி காரியாலயம் வெளியிட்ட நூலொன்றின் அட்டைப்படம்
சக்தி மலர் வரிசை நூல்களில் ஒன்று
சக்தி வை. கோவிந்தனைப் பற்றிய ஆய்வு நூல்

மேலும் அணில், பாப்பா, குழந்தைகள் செய்தி என்னும் குழந்தைகள் இதழ்களையும் மங்கை என்னும் பெண்களுக்காக மாத இதழையும் சிறுகதைகளை மட்டுமே கொண்ட கதைக்கடல் என்னும் மாத இதழையும் திரை இதழ் ஒன்றையும் நடத்தினார்.

அணில் இதழுக்குத் தமிழ்வாணன் சிறிதுகாலம் ஆசிரியராக இருந்தார். மங்கை இதழுக்குக் குகப்பிரியை ஆசிரியராக இருந்தார். குழந்தைகள் செய்தி இதழுக்குக் கோவிந்தனே ஆசிரியராக இருந்தார்.

மாதம் ஒரு புத்தகம்

உலகப்போர் நேரத்தில் கிழமை இதழ், திங்கள் இதழ் ஆகியன போன்ற கால இதழ்களுக்குத் தாள் தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே திங்களுக்கு ஒரு தொகுப்பு நூல் எனப் பல தொகுப்பு நூல்கள் வெளிவந்தன. அவ்வகையில் சக்தி வை. கோவிந்தனும் வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதிய கதை, கட்டுரை, கவிதை ஆகியவற்றைத் தொகுத்து சக்தி என்னும் பெயரில் திங்கள்தோறும் ஒரு தொகுப்பு நூலை ஒரு ரூபாய் விலையில் 1930ஆம் ஆண்டு திசம்பர் முதல் வெளியிட்டார். இந்நூல் வரிசைக்குத் தொ. மு. சி. ரகுநாதனும் கு. அழகிரிசாமியும் பொறுப்பாசிரியர்களாக இருந்தனர். கோவிந்தன் பதிப்பாசிரியராக இருந்தார். இவ்வரிசையில் ஆணா? பெண்ணா?, தர்ம ரட்சகன், ஜீவப்பிரவாகம், திரிவேணி முதலிய 141 நூல்கள் வெளிவந்தன.

பதிப்பகங்கள்

சக்தி வை. கோவிந்தன் முதலில் அன்பு நிலையம் என்னும் பதிப்பகத்தை 1938ஆம் ஆண்டில் தொடங்கினார். அதன் வழியாகச் சுத்தானந்த பாரதியார் மொழிபெயர்த்த விக்டர் கியூகோவின் புதினங்களான ஏழைபடும்பாடு, இளிச்சவாயன் ஆகியவற்றை முறையே 1938, 1939ஆம் ஆண்டுகளில் வெளியிட்டார்.[5]

1939ஆம் ஆண்டில் சக்தி காரியாலயம் என்னும் பதிப்பகத்தைத் தொடங்கி இருநூற்று ஐம்பது நூல்கள் வரை வெளியிட்டார். அவற்றுள் சில:

வ. எண்நூலின் பெயர்நூலாசிரியர்மொழிபெயர்ப்பாளர்ஆண்டு
01அகண்ட இந்தியாகே. எம். முன்ஷி
02அபேதவாதம் சி. ராஜகோபாலாச்சாரிதி.ஜ.ர
03அலமுசூடாமணி
04அறிஞர் மார்க்ஸ்ஆர். ராமனாதன்
05அன்ன கரினாடால்ஸ்டாய்
06உணவுப் பஞ்சம்மு. அருணாசலம்
07வ. உ. சிதம்பரம் பிள்ளை சரித்திரம்பரலி சு. நெல்லையப்பர்
08உலோகங்களும் நாமும்மு. அருணாசலம்
09ஐந்தாவது சுதந்திரம்லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி
10ஏசுநாதர் போதனைஜே. சி. குமரப்பா
11கம்ப ராமாயணம்
12காந்தி மகான் கதைகொத்த மங்கலம் சுப்பு
13காய்கறித் தோட்டம்மு. அருணாசலம்
14அழகிரிசாமியின் கதைகள்கு. அழகிரிசாமி
15சிற்றன்னைபுதுமைப்பித்தன்
16சுகுண சுந்தரிவேதநாயகம் பிள்ளை
17சிலையும் குருவியும்ஆஸ்கர் வைல்டு
18சிவப்புக் குதிரைக்குட்டிஜான் ஸ்டீன்பெக்
19சூரிய நமஸ்காரம்டி. வி. திரிவேதி
20செல்வம்க. சந்தானம்
21சோவியத் ருஷ்யா
22தந்தையின் காதலிமார்க்சிம் கார்க்கி
23பாரதியார் சரித்திரம்செல்லம்மா பாரதி
24மகாகவி பாரதியார் கவிதைகள்
25மகாகவி பாரதியார்வ.ரா
26ரத்தக் களரிநேதாஜி
27போரும் அமைதியும்லியோ டால்ஸ்டாய்டி. எஸ். சொக்கலிங்கம்
28பிளேட்டோவின் அரசியல்பிளேட்டோவெ. சாமிநாத சர்மா
29லெனின் பிறந்தார்ஆர்.ராமனாதன்
30குழந்தைமை ரகசியம்மாண்டிசோரி
31இந்திய அரசியல் சட்டம்
32திருக்குறள் (1957-சூலை -3)பரிமேலழகர்
34பாழ் நிலம்டி. எசு. எலியட்
35கட்டுரைகள்ஆனந்த குமாரசாமி
36பழத் தோட்டம்மு. அருணாசலம்
37வாழைத் தோட்டம்மு. அருணாசலம்
38பெண் மனம்லட்சுமி
39பவானிலட்சுமி
40காதல்வாஸிலெவ்ஸ்கா
41கன்னிகாதொ. மு. சி. ரகுநாதன்
42வைஜந்தியின் காதல்சித்ரா
43முத்ரா ராசஸம் (நாடகம்)
44டால்ஸ்டாய் சிறுகதைகள் 1 & 2டால்ஸ்டாய்கு.ப.ராஜகோபாலன், ரா.விசுவநாதன்1941
45வாசந்தி
46சாந்தி எங்கே?
47கதைக் கடல்-1
48கதைக் கடல்-2
49கதைக் கடல்-3
50கதைக் கடல்-4
51கதைக் கடல்-5
52கதைக் கடல்-6: பெண்சாதி முதலிய கதைகள்தி.நா.சுப்பிரமணியன் (பதி)1946 நவம்பர்
53சஞ்சீவிகுகப்ரியை
54எரிமலை அல்லது முதலாவது இந்திய சுதந்திர யுத்தம்வீர சாவர்க்கர்ஜெயமணி சுப்பிரமணியம்
55கூண்டுக்கிளி (வங்காள நாடகங்கள் 5)ஹரிந்திரநாத் சட்டோபாத்தியாயதி.ஜ.ர1941
56கமலா முதலிய சிறுகதைகள்ஆர். திருஞானசம்பந்தம்1942
57இராமகிருஷ்ணர் அருள்வாக்கு1942
58தமிழர் யார்?நாரண துரைக்கண்ணன்1939
59ஜீவப்பிரவாகம்?கு.அ மற்றும் பலர்1950
60தர்மரட்சகன்மொழிபெயர்ப்பு கு.அ (குஸ்தாவ் ப்ளாபர்ட் ஜுலியஸ்1950

பென்குயின் பதிப்பகத்தின் புத்தகங்களுக்கு இணையாக நல்ல தாளில், நேர்த்தியான அச்சில், அழகிய படங்களோடு ஏறத்தாழ 40 நூல்களைச் சக்தி மலர் என்னும் தலைப்பின் கீழ் வரிசையாக வெளியிட்டார். அவற்றுள் சில:

வ. எண்நூலின் பெயர்நூலாசிரியர்மொழிபெயர்ப்பாளர்
01இனி நாம் செய்ய வேண்டுவது யாது?டால்ஸ்டாய்
02உலகம் சுற்றும் தமிழன்ஏ. கே. செட்டியார்
03ஜப்பான்ஏ. கே. செட்டியார்
04அமெரிக்காஏ. கே. செட்டியார்
05பிரயாண நினைவுகள்ஏ. கே. செட்டியார்
06எருவும் எருஇடுதலும்மு. அருணாசலம்

சங்கப் பொறுப்புகள்

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் உதவியோடு குழந்தை எழுத்தாளர் சங்கம் என்னும் சங்கத்தைக் கோவிந்தன் உருவாக்கினார். அதன் தலைவராகச் சிலகாலம் பணியாற்றினார்.

கல்கி இரா. கிருட்டிணமூர்த்தி, தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவாக இருந்தபொழுது வை. கோவிந்தன் அதன் துணைத் தலைவராக இருந்தார். தென்னிந்தியப் புத்தகத் தொழில் கழகத்தின் பொருளாளராகவும், தலைவராகவும் பணியாற்றினார். அப்பொழுது 'வீட்டுக்கொரு நூலகம்' என்னும் முயற்சியில் ஈடுபட்டார்.

குடும்பம்

அழகம்மை என்பவரைக் கோவிந்தன் மணந்தார். சில ஆண்டுகளில் அவர் மறைந்த்தும் புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமத்தில் துறவு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். பின்னர் சிலரின் அறிவுரைப்படி 1946இல் மு.அ. செல்லப்ப செட்டியாரின் மகள் வள்ளியம்மையை மறுமணம் புரிந்தார்.[5]

எழுதிய நூல்கள்

வாழ்வின் இறுதிப்பகுதியில் வை. கோவிந்தன் தானே எழுத்தாளராக மாறிச் சில நூல்களை எழுதினார். அவற்றுள் சில:

  1. வை. கோ.வின் குழந்தைக் கதைகள்
  2. பாப்பாவுக்குக் கதைகள்
  3. மரம் பறந்தது
  4. அணில் அண்ணன் கதைகள்
  5. நான்கு முட்டாள்கள்
  6. அலாவுதீனும் அற்புத விளக்கும்
  7. வை. கோ.வின் ஈ.சாப் குட்டிக் கதைகள்
  8. தமிழ்நாட்டு நாடோடிக் கதைகள்
  9. தவளைக் குளம்
  10. நச்சு மரம்
  11. கடலோடியின் கதை
  12. கூனன் கதை

இறப்பு

வாழ்வின் இறுதிப் பகுதியில் வறுமையின் வாய்ப்பட்ட சக்தி வை. கோவிந்தன் சென்னையில் ஒரு விடுதியில் 1966அக்டோபர் – 16ஆம் நாள் மரணமடைந்தார்.

சக்தி வை.கோ.வைப் பற்றி

சக்தி வை. கோவிந்தனைப் பற்றி அவருடைய நூற்றாண்டை ஒட்டி, சக்தி வை. கோவிந்தன் தமிழின் முன்னோடிப் பதிப்பாளுமை என்னும் நூலைப் பழ. அதியமான் எழுதியிருக்கிறார்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வை._கோவிந்தன்&oldid=3712806" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்