வேணு நாகவல்லி
வேணு நாகவல்லி (Venu Nagavally, மலையாளம்: വേണു നാഗവള്ളി; (16 ஏப்ரல் 1949 – 10 செப்டம்பர் 2010) ஒரு இந்திய திரைப்பட நடிகரும், திரைக்கதை எழுத்தாளரும், திரைப்பட இயக்குனரும் ஆவார். மலையாளத் திரைப்படத்துறையில் இவர் செய்த பணியின் மூலம் பிரபலமானவர்.
வேணு நாகவல்லி | |
---|---|
பிறப்பு | என். எஸ். வேணுகோபால் 16 ஏப்ரல் 1949 ராமன்கரி, ஆலப்புழா மாவட்டம், கேரளம், இந்தியா |
இறப்பு | 9 செப்டம்பர் 2010 திருவனந்தபுரம், கேரளம் | (அகவை 61)
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர், திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் |
பெற்றோர் | நாகவல்லி ஆர்.எஸ் குருப், ராஜம்மா நாகவல்லி |
வாழ்க்கைத் துணை | மீரா |
பிள்ளைகள் | விவேக் |
இவர் 12 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[1][2][3] எழுத்தாளரும், திரைப்பட விமர்சகரும், அனைத்திந்திய வானொலி நிலைய ஒலிபரப்பாளருமானநாகவல்லி ஆர். எஸ். குருப் என்பவரின் மகன் ஆவார்.[4]
வேணு ஏறத்தாழ 50 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்கத்தில் 1986-இல் வெளியான சுகமோ தேவி, 1987-இல் வெளியான சர்வகலாசாலை, 1990-இல் வெளியான லால்சலாம், ஏய் ஆட்டோ (1990) மற்றும் 1991-இல் கிலுக்கம் (1991) ஆகிய திரைப்பட வணிக ரீதியாக வெற்றிகரமான திரைக்கதைகளாக அமைந்தன.
இறப்பு
2010 செப்டம்பர் 9ம் தேதி திருவனந்தபுரத்தில் வேணு நாகவல்லி காலமானார்.[5]