7 அக்டோபர்: பாலத்தீனியப் போராளி இயக்கமான ஹமாஸ், காசா-இசுரேல் எல்லையில் இசுரேல் நாட்டில் அமைந்துள்ள வேலியை சேதப்படுத்தி இசுரேலின் தென் மாவட்டத்தின் வழியே நுழைந்து தாக்கியது
9 அக்டோபர்: காசாக்கரையில் வான்வழித் தாக்குதல்களை இசுரேலிய இராணுவம் நடத்தியதோடு, காசாக்கரைக்கு செல்லும் அத்தியாவசிய பொருட்கள், வளங்களை இசுரேல் துண்டித்தது
13 அக்டோபர்: காசா நகரம் உள்ளிட்ட வடக்கு காசா பகுதியிலுள்ள பொதுமக்கள் வெளியேற்றப்பட வேண்டுமென இசுரேல் எச்சரிக்கை விடுத்தது
27 அக்டோபர்: இசுரேல் இராணுவம் வடக்கு காசாவிற்குள் தரைவழியாக நுழைந்து, இராணுவத் தாக்குதலைத் தொடங்கியது
காசா நகரம் இசுரேல் இராவணுவத்தால் முற்றுகையிடப்பட்டது
24-30 நவம்பர்: இசுரேல்-ஹமாஸ் இடையேயான 4 நாள் போர்நிறுத்த உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் 7 நாட்களாக நீட்டிக்கப்பட்டது