வாரணாசி இசை

வாரணாசி இசை ( Music in Varanasi), பண்டைய புராண புனைவுகளுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இந்த நகரத்தை நிறுவியதாகக் கூறப்படும் சிவன், இசை மற்றும் நடன வடிவங்களை வளர்த்த பெருமைக்குரியவர் ஆவார். விஸ்வாமித்திரர் மற்றும் மகாகோபிந்தின் மகனான ரேணு, வாரணாசியில் இசை மரபின் முன்னோடிகளாக இருந்தபோது, அரம்பையர்கள், கந்தர்வர்கள் மற்றும் கிண்ணரர்கள் ஆகியோர் இந்த கலை வடிவத்தின் பாரம்பரிய பயிற்சியாளர்களாக இருந்தனர். மேலும் புனித சைதன்யர் மற்றும் வல்லபச்சார்யா போன்ற முன்னோடிகள் இந்த இசை பாரம்பரியத்தை வாரணாசியில் பரப்புவதில் கவனம் செலுத்தினர். [1] வாரணாசியின் குறிப்பிடத்தக்க இசைக்கலைஞர்களில் சிடார் இசைக்கலைஞர் ரவிசங்கர், செனாய் இசைஞானி பிஸ்மில்லா கான் மற்றும் பாடகர் கிரிஜா தேவி ஆகியோர் அடங்குவர். தற்போது, கிரியேட்டிவ் சிட்டிஸ் நெட்வொர்க்கின் கீழ் யுனெஸ்கோ "சிட்டிஸ் ஆஃப் மியூசிக்" இன் உலகளாவிய அலைவரிசையில் வாரணாசி இசை இணைந்துள்ளது. [2] படைப்பு நகர நெட்வொர்க்கின் இசை பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரணாசி இந்த பண்டைய நகரத்தின் வளமான இசை பாரம்பரியத்தை தெளிவாக குறிக்கிறது.

இடது: வாரணாசியை சேர்ந்த ரவி சங்கர், சின்னமான சித்தார் கருவி இசைக் கலைஞருக்கு பாரத ரத்னா விருது; வலது: வாரணாசி செனாய் இசை மேதை பிசுமில்லா கான், சரோத் மேதை விகாசு மகாராச், யாசு பாட்டி & கரம்வீர்

வரலாறு

இசைக்கருவிகளை வாசிக்கும் அரம்பையர் சிலைகளின் தொல்பொருள் கண்டுபிடிப்புகள் வாரணாசிக்கு இசையுடன் நீண்ட காலமாக தொடர்பு இருப்பதைக் குறிக்கிறது. [1] இடைக்காலத்தில், வைணவ பக்தி இயக்கம் நாடு முழுவதும் பரவியது. காசி இராச்சியம் வாரணாசியை மையமாகக் கொண்டது என்பதை இலக்கியம் சான்றளிக்கிறது. புகழ்பெற்ற புனித இசைக்கலைஞர்கள் சுர்தாஸ், கபீர், ரவிதாஸ், மீரா மற்றும் துளசிதாஸ் போன்றோர் வாரணாசியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

புதிய வைணவ சமய இயக்கத்தின் போது வாரணாசியில் பக்தி இசையின் இசை கலாச்சாரம் பரவியது, புனித மனிதர்கள் பக்தி பாடல்களைப் பாடும்போது பக்தி இயக்கத்திற்கு மக்களை ஈர்த்தது. [3]

16ம் நூற்றாண்டில் இசை

16 ஆம் நூற்றாண்டில் கோவிந்த் சந்திராவின் முடியாட்சி ஆட்சியின் போது, துருபாத் பாணி பாடுவது அரச ஆதரவைப் பெற்றது மற்றும் தாமர், ஹோரி மற்றும் சதுரங்கா போன்ற பிற தொடர்புடைய இசை வடிவங்களுக்கு வழிவகுத்தது. இசுலாமிய ஆட்சியாளர்களின் கீழ் , அவாத்தின் நவாப், காசியின் நிர்குன் பாடகர்கள் அசாவரி, " குங்கட் கே பாட் கோல்" என்ற பாடலை பிரபலப்படுத்தியது மட்டுமல்லாமல், கங்கை நதியில் மிதக்கும் படகுகளில் திருவிழாக்கள் போன்ற பாடல் நிகழ்ச்சிகளையும் பிரபலப்படுத்தினர். பிரபலமான சில திருவிழாக்கள் ஜூலா, ஜூமர், கஜ்ரி, பிர்ஹா, தங்கல் மற்றும் குலாப் பாரி, இந்த பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது. இந்த நேரத்தில் முஸ்லீம் கலைஞர்களான ஷோரி மியான், கம்மு கான் மற்றும் ஷேட் கான் ஆகியோரால் பிரபலப்படுத்தப்பட்ட பாடும் பாணிகளில் ஒன்று தப்பா முறையில் பாடும் வடிவம் ஆகும். [1]

இசை பாணிகள்

சமீப காலங்களில், காசியின் மகாராஜாக்கள், குறிப்பாக மகாராஜ் பிரபு நாராயண் சிங், இசைக்கு ஆதரவளித்துள்ளார். மொகல் பேரரசர் இரண்டாம் பகதூர் சா சஃபார் ஆட்சியின் போது, குறிப்பிடத்தக்க இசைக்கலைஞர்கள் வாரிஸ் அலி, அக்பர் அலி, நிசார் கான், சாதிக் அலி மற்றும் ஆஷிக் அலி கான் ஆகியோர் இருந்தனர். காசியின் "அரண்மனை இரத்தினங்கள்" என்று புகழப்பட்ட பசாத் கானின் மகன்களான அலி முகமது மற்றும் அலி பக்ஸ் ஆகியோர் இசையை வளர்த்தனர். மேலும், இந்த நேரத்தில், வளர்ந்த உள்ளூர் இசை பாணிகளாக இருந்த பனராசி தும்ரி, தாத்ரா, சைட்டி, ஹோரி, பைரவி, கஜ்ரி, தரனா, காட்டோ மற்றும் பல இசை பாணிகளும் ஏற்றமடைந்தது. மேலும், திருவத், சத்ரா, கம்சா, லாவ்னி, சதுரங், சர்காம், ரக்மலா, கீர்த்தனம், கௌவாலி, கதகாயன், பஜன் மற்றும் ராமாயண கீர்த்தனம் போன்ற புதிய வடிவங்கள் உருவாக்கப்பட்டன. [1] இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, பண்டிட் ராம் சஹாய் தபலாவின் பெனாரஸ் கரானாவை உருவாக்கினார், மேலும் இந்த வகையினுள், குறிப்பிடத்தக்க இசைக்கலைஞர்களில் கிஷன் மகாராஜ், சம்தா பிரசாத், குமார் போஸ் மற்றும் சமர் சஹா ஆகியோர் அடங்குவர். ஒரு வகை இசைக்கலைஞர்களான, கந்தர்வர்கள், தங்கள் மகள்களுக்கு இசை மற்றும் நடனம் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கிறார்கள்.

குறிப்பிடத்தக்க இசைக்கலைஞர்கள்

வாரணாசியின் பிரபல பாரம்பரிய இசைப் பாடகர் கிரிஜா தேவியின் தும்ரிஸ் இசை நிகழ்ச்சி.

இந்தியாவின் மிகவும் திறமையான இசைக்கலைஞர்கள் பலர் வாரணாசியைச் சேர்ந்தவர்கள் ஆவர். நாட்டின் மிக உயர்ந்த குடிமையியல் விருது பாரத ரத்னா வழங்கப்பட்ட பிரபல சித்தார் இசைக்கலைஞர் பண்டிட் ரவிசங்கர், வாரணாசியைச் சேர்ந்தவர். பாரத ரத்னாவுடன் கௌரவிக்கப்பட்ட ஒரு பிரபலமான செனாய் இசைஞானியான உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாரணாசியிலிருந்து வந்தவர் ஆவார். [1] ஜோடின் பட்டாச்சார்யா, ஒரு சரோத் இசைக்கலைஞர் மற்றும் பாபா அல்லாவுதீன் கானின் சீடரும் வாரணாசியில் இருந்து வந்தவர் ஆவர். முகலாய பேரரசர் அக்பரின் நீதிமன்றத்தின் இசைக்கலைஞர் மியான் தான்சேன் வாரணாசியில் பிறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்திய இசையான, தும்ரிஸின் பாரம்பரிய பாடகர் கிரிஜா தேவி வாரணாசியில் பிறந்தார். மேலும், வாரணாசி இசையை மரியாதை மற்றும் பாராட்டுக்கு உயர்த்துவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். வாரணாசியின் குறிப்பிடத்தக்க இசைக்கலைஞர்களில் பிரேம் லதா சர்மா மற்றும் ஜெயதேவா சிங் ஆகியோர் அடங்குவர்.

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வாரணாசி_இசை&oldid=2963096" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்