வன்கூடு
வன்கூடு (skeleton) (கிரேக்கம்: σκελετός, skeletós "உலர்ந்த்து"[1]) என்பது (அல்லது பொதுவழக்கில் எலும்புக்கூடு என்று அழைக்கப்படுவது), உயிரிகளின் உடலைத் தாங்குவதற்கான வலுவான, கடினத்தன்மை கொண்ட ஒரு சட்டகம் ஆகும். இது விலங்கின் உடலை நேராக வைத்திருப்பதுடன், அதற்கு வடிவத்தையும் வலுவையும் கொடுக்கிறது. வன்கூடு புறவன்கூடாகவோ, அல்லது அகவன்கூடாகவோ நீர்ம வன்கூடாகவோ உயிர்க்கலக்கூடாகவோ அமையலாம். ஆமை போன்ற விலங்குகளில் அகவன்கூடு, புறவன்கூடு இரண்டும் காணப்படும். நிலைத்திணை (தாவர) வன்கூடுகள் இயங்குபவையாகவும் தகைவை ஏற்பவையாகவும் உள்ளன.
வன்கூடு | |
---|---|
![]() சிட்னியில் உள்ள ஆத்திரேலிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மாந்த,குதிரை எலும்புக் கூடுகள். | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
கிரேக்கம் | σκελετός |
MeSH | D012863 |
உடற்கூற்றியல் |
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7b/Heiyantuduwa_Raja%27s_Skeleton.jpg/220px-Heiyantuduwa_Raja%27s_Skeleton.jpg)
கொலம்போ தேசிய அருங்காட்சியகம், சிறீலங்கா
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6d/Vein_skeleton_of_a_leaf_%28de-ghosted%29.jpg/220px-Vein_skeleton_of_a_leaf_%28de-ghosted%29.jpg)
வன்கூட்டு வகைகள்
வன்கூடுகள் திண்ம வன்கூடு, பாய்ம வன்கூடு என இருபெரும் வகைகளாக அமைகின்றன. திண்ம வன்கூடு உடலின் உள்ளே அமையும் போது அகவன்கூடு எனவும் புறத்தே அமையும் போது புறவன்கூடு எனவும் அழைக்கப்படுகிறது. இவை மேலும் மீள்தகவின (இயங்குவன) எனவும் விறைதகவின (இயங்காதன) எனவும் பகுக்கப்படுகின்றன.[2] பாய்ம வன்கூடுகள் எப்போதும் உடலுக்கு உள்ளே அமைகின்றன.
புறவன்கூடு
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d4/Hym-myrmicinae.gif/220px-Hym-myrmicinae.gif)
புறவன்கூடு என்பது உடலின் உள்ளாக இருக்கும் மென்மையான பாகங்கள், உடல் உறுப்புக்கள் அனைத்தையும் மூடி வெளிப்பக்கமாக இருந்து அவற்றிற்குப் பாதுகாப்பை வழங்குவதாகும். இது பொதுவாக பல முதுகெலும்பிலிகளில் காணப்படும். ஓட்டுடலிகள், பூச்சிகள் போன்றவற்றை உள்ளடக்கிய கணுக்காலிகளில் இருக்கும் புறவன்கூடு, அவற்றின் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் தோல்கழற்றல் (moulting) மூலம் அகற்றப்படும்.
பூச்சிகளில் இருக்கும் வன்கூடு அவற்றிற்குப் பாதுகாப்பை அளிப்பதுடன், அவற்றின் தசைகள் இணையும் மேற்பரப்பாகவும், அவற்றில் நீரிழப்பு ஏற்பட்டு உலர்ந்துவிடாமல் தடுக்கும் அமைப்பாகவும், சூழலுடன் தொடர்பு கொள்ளும் புலன் உறுப்பாகவும் தொழிற்படும். மெல்லுடலிகளிலும் புற வன்கூடு இவ்வகைச் செயற்பாடுகளை நிகழ்த்தினாலும் சூழலுடன் உறவுகொள்ளும் புலன் உறுப்பாகச் (பொறியாகச்) செயற்படுவதில்லை.
புறவன்கூடு வெவ்வேறு உயிரினங்களில் வெவ்வேறு பொருட்களினால் ஆனதாக இருக்கும். கணுக்காலிகளின் வன்கூடு கைட்டினால் ஆனதாகவும், பவளம், மெல்லுடலிகளில் இருக்கும் வன்கூடு கால்சியத்தினால் ஆனதாகவும், ஆரக்கதிரிகள் வகுப்பைச் சார்ந்த முன்னுயிரிகளின் வன்கூடு சிலிக்கேற்றினால் ஆனதாகவும் இருக்கும்.
புறவன்கூடு விலங்கின் ஒட்டுமொத்த பொருண்மையை ஒப்பிடும்போது மிகவும் பளுவாக அமையலாம். ஆனால், நிலத்தில் வாழும் விலங்கின் புறவன்கூடு ஒப்பீட்டளவில் நீர்வாழிகளை விட சிறியதாகவே இருக்கும். நீரில் எடை குறைவதால், நீரில் வாழும் விலங்குகள் பெரிய புறவன்கூடுகளைப் பெற்றுள்ளன. தென்பெரு மட்டி எனும் பசிபிக் கடலில் வாழும் மிகப் பெரிய உவர்நீர் மட்டியின் புறக்கூடு உருவிலும் எடையிலும் பாரியதாகும். சிரிங்சு அருவானசு (Syrinx aruanus) எனும் கடல்நத்தை மிகப் பெரிய புறக்கூட்டைப் பெற்றுள்ளது.
அகவன்கூடு
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3e/Eptesicus_fuscus_skeleton.jpg/220px-Eptesicus_fuscus_skeleton.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2c/Beaver_skeleton.jpg/220px-Beaver_skeleton.jpg)
அகவன்கூடு முதுகெலும்புள்ள விலங்குகளின் அகநிலைத் தாங்கு கட்டமைப்பாகும். இது கனிம மயமாகியத் திசுக்களால் (இழையங்களால்) ஆனதாகும். புரையுடலியான கடற்பஞ்சுகளில் உள்ளது போல இது வெறும் தாங்கல் அமைப்பாக நிலவுவதில் இருந்து, தசைகள் பொருந்துவதற்கான இடமாகவோ தசைதரும் விசைகளைக் கடத்தும் இயங்கமைப்பாகவோ செயல்படுதல் வரையிலான சிக்கலான தொழிற்பாடுகளை நிகழ்த்தும். உண்மையான அகவன்கூடு இடைத்தோல் திசுவடுக்கில் இருந்து உருவாகிறது. இத்தகைய அகவன்கூடு முள்தோலிகளிலும் முதுகுநாணிகளிலும் அமைகின்றன.
நெகிழ்தகவு வன்கூடுகள்
நெகிழ்தகவு அல்லது மீள்தகவு வன்கூடுகள் இயங்கக் கூடியன; எனவே, அவற்ருக்குத் தகைவைத் தரும்போது உருமாற்றம் அடைந்து தகைவு விலகியதும் முதலில் இருந்த வடிவத்துக்கு மீள்கின்றன. இவை முதுகெலும்பில்லாத விலங்குகளில் அமைந்துள்ளன; எடுத்துகாட்டாக, இருகூட்டுக் கிளிஞ்சல்களின் கணுக்களிலும் கூழ்ம மீன்களிலும் இவை அமைகின்றன. இவ்வகை எலும்பை வளைக்க தசையின் சுருங்கலே போதுமானது என்பதால் மீள்தகவு வன்கூடுகள் மிகவும் பயனுள்ளவையாகும்; தசை தளர்ந்த்தும் இவை முதலில் இருந்த வடிவத்துக்கு மீள்கின்றன. சில மீள்தகவு வன்கூடுகள் குருத்தெலும்புகளால் ஆனவையாக அமைந்தாலும், பொதுவாக இவை புரதத்தாலும் பல்சாக்கிரைடுகளாலும் நீராலும் ஆனவையாகவே அமைகின்றன.[2] கூடுதல் தாங்கலும் பாதுகாப்பும் வேண்டும்போது இவை விறைத்த வன்கூடுகளால் தாங்கப்படுகின்றன. விறைத்த வன்கூடில்லாமலே உடல் கட்டமைப்பை தாங்கலாம் என்பதால் நீர்வாழ் விலங்குகளில் மீள்தகவு வன்கூடுகள் அமைகின்றன.[3]
விறைதகவு வன்கூடுகள்
விறைதகவு வன்கூடுகள் தகைவைத் தரும்போது நெகிழ்ந்து விடாமல் உறுதியான தாங்கல் அமைப்பாக செயல்படுகின்றன. இவை தரைவாழ் உயிரிகளில் பொதுவாக அமையும். நத்தைக் கிளிஞ்சல் போன்ற நீர்வாழ் உயிரிகளில் அமையும் இத்தகைய வன்கூடுகள் பாதுகாப்புக்காக உதவுகின்றன அல்லது நீரில் வேகமாக நீந்தும்போது, அவற்றின் தசைகளுக்குத் தேவைப்படும் துணைத் தாங்கல் அமைப்பாக உதவுகின்றன. விறைதகவு வன்கூடுகள் கணுக்காலிகளில் கைட்டினாலும், பவளப் பாறைகளிலும் மெல்லுடலிகளிலும் சுண்ணக் கரிமவேற்று போன்ற சுண்ணகச் சேர்மங்களாலும் நுண்பாசிகளிலும் ஆரக்கதிரிகளிலும் சிலிக்கேட்டாலும் உருவாகின்றன.
உயிர்க்கல வன்கூடுகள்
உயிர்க்கல வன்கூடு (கிரேக்கம்: kytos = உயிர்க்கலம் (cell)) உயிர்க்கலங்களின் வடிவத்தை நிலைநிறுத்தவும் பேணவும் பயன்படுகிறது. இது தான் உயிர்க்கல வடிவத்தைப் பேணிப் பாதுகாக்கும் இயங்கியல் கட்டமைப்பாகும். இது கசையிழையையும், சிலியா தசைகளையும் அடுக்குவரிசைக் கால்களையும் பயன்படுத்தி உயிர்க்கலம் இயங்குவதற்கும் உதவுகிறது; இது உயிர்க்கல உள்போக்குவரத்துக்கும் (அதாவது, நுண்ணுறுப்புகளும் நாளங்களும் இயங்குவதற்கும்) உயிர்க்கலப் பிளவுக்கும் உதவுகிறது.
பாய்ம வன்கூடுகள்
நீர்ம வன்கூடுகள்
நீர்ம வன்கூடு என்பது ஓரளவு விறைப்பான, அழுத்தத்தில் நீர்மம் நிரம்பிய தசை சூழ்ந்த மென்திசுக் கட்டமைப்பாகும். உடற்பகுதியைச் சுற்றியமைந்த நெடுக்கு, வட்டத் தசைகள் ஒன்றுவிட்டு ஒன்றாக மாறிமாறி விரிந்து சுருங்கும் இயக்கத்தை நீளவாட்டில் ஏற்கின்றன. இதற்கான பொது எடுத்துகாட்டு மண்புழுவாகும்.
வன்கூடமைந்த உயிரிகள்
முதுகெலும்பிலிகள்
முள்தோலிகளும் அதைப்போன்ற மெல்லுடல் கொண்ட மண்புழு, கூழ்மைமீன்கள் ஆகிய முதுகெலும்பிலிகளின் அகவன்கூடுகள் நீர்மநிலையியல் வன்கூடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன; புரையான உடற்குழி கொண்ட குழியுடலிகளில் குழிநீர்மம் அமைந்துள்ளது. இந்தக் குழிநீர்ம அழுத்தம் அதைச் சூழ்ந்துள்ள தசையுடன் இணைந்து உயிரியின் வடிவத்தை மாற்றி, அதன் உடலில் இயக்கத்தை உருவாக்குகிறது.
கடற்பஞ்சு
கடற்பஞ்சின் வன்கூடு நுண்ணளவு சுண்ணக அல்லது மணலகத்தாலான பஞ்சு நுண்கண்ணறைகளைக் கொண்டுள்ளன. கடற்பஞ்சுகளில் 90% உயிரினங்கள் தெமோக்கடற்பஞ்சுகலாக அமைகின்றன. இவற்றின் வன்கூடுகள் புரத நாரிழை அல்லது மணலகம் அல்லது இரண்டாலும் ஆகிய Tநுண்கண்ணறைகளைக் கொண்டுள்ளன. மணலக நுண்கண்ணறைகள் உள்ளவை, மற்ற கண்ணாடிவகைக் கடற்பஞ்சில் இருந்து வேறுபட்ட வடிவத்தைப் பெற்றுள்ளன.[4]
முள்தோலிகள்
உடுமீன் (நட்சத்திர மீன்) உட்பட்ட, முட்தோலிகளின் வன்கூடு, சால்சைட் எனும் சுண்ணகச் சேர்மத்தாலும் ஓரளவு மகனீசிய உயிரகி (மகனீசியம் ஆக்சைடு) எனும் மகனீசியச் சேர்மத்தாலும் அமைகிறது. இது மேல்தோலுக்கு அடியில் உள்ள இடைத்தோலில் சட்டகவாக்க உயிர்க்கலங்களின் கொத்தில் அமைகிறது. இது புரையோடு உறுதியான இலேசாக இருக்கும். இது சிறு சிறு முட்கள் போன்ற சுண்ணகத் தட்டுகளோடு ஒன்றினைந்து அமையும்; இது அனைத்து திசைகளிலும் வளரவல்லது. எனவே, எளிதாக அழியும் உடற்பகுதியைப் பதிலீடு செய்யும். மூட்டுகளால் இணைந்துள்ள தனித்தனி எலும்புப் பகுதிகள் தசைகளுடன் இணைந்து உடலியக்கத்தை உருவாக்குகின்றன.
முதுகெலும்பிகள்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/91/Huxley_-_Mans_Place_in_Nature.jpg/300px-Huxley_-_Mans_Place_in_Nature.jpg)
பெரும்பாலான முதுகெலும்பிகளில் அமையும் முதன்மையான வன்கூட்டுறுப்பு எலும்பு அல்லது எலும்புக்கூடு என அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் மூட்டுகளில் காணப்படும் மற்றொரு முதன்மையான வன்கூட்டுறுப்பு குருத்தெலும்பு ஆகும். சுறாவை உட்பட்ட, குருத்தெலும்பு மீன்கலின் முழு எலும்புக்கூடுமே குருத்தெலும்புகளால் ஆயதாக அமைகிறது. வன்கூட்டின் அடிப்படை அலகுகளாக எலும்புத்துண்டங்கள் அமையும் பாணி, பாலூட்டிகள், பறவைகள், மீன்கள், ஊர்வன, இரு ஊடக வாழ்விகள் ஆகிய அனைத்து முதுகெலும்பிகளிலுமே பொதுவாக உள்ளது. இப்பாணி, குறிப்பாக முதுகெலும்புத் தூணிலும் விலாக்கூட்டிலும் தெளிவாக்க் காணப்படுகிறது.உடலளவில் தாங்கும் அமைப்புகளாக அமையும் எலும்புகள், உயிர்க்கல மட்டத்தில் சுண்ணகம், பாசுபேற்றுத் தேக்கிகளாகவும் அமைகின்றன.
மீன்
மீன்களின் உள்ளே தாங்கல் கட்டமைப்பக அமையும் வன்கூடு, குருத்தெலும்புகளாலோ எலும்புகளாலோ ஆனதாக அமையலாம். முதன்மை வன்கூட்டுறுபாக முதுகெலும்புத் தண்டு அமைகிறது. இது இலேசான வலிய முதுகெலும்புத் துண்டங்களால் ஆனதாகும். விலா எலும்புகள் முள்ளந்தண்டில் இணைந்துள்ளன. இவற்றில் மூட்டுகளோ மூட்டு வளையங்களோ அமைவதில்லை. இவை தசையாலேயே தாங்கப்படுகின்றன. மீனின் முதன்மையன புற உறுப்பு துடுப்பாகும். இது எலும்பாலோ நுண்கதிர் போன்ற மென்முட்களாலோ ஆனதாகும். இதற்கு விதிவிலக்கு மீனின் வால்சிறகு ஆகும். இது முள்ளந்தண்டோடு இணைவதில்லை. இவை முதன்மை நடுவுடற்பகுதியால் தாங்கப்படுகின்றன.
பறவைகள்
பறவையின் வன்கூடு பறப்பதற்கேற்ப தகவமைந்ததாகும். இது மிக்வும் இலேசானதாகவும் அதேநேரத்தில் பறக்க எழும்போதும் இறங்கும்போதும் ஏற்படும் தகைவை தாங்குமளவுக்கு வலியதாகவும் அமைந்துள்ளது. முதன்மையான வன்கூட்டின் தகவமைப்பு பல எலும்புகள் பின்னிப்பிணைந்து ஒற்றையென்பாதலாகும். எனவே, தரைவாழ் முதுகெலும்பிகளைவிட பறவைகளின் எலும்புகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே அமையும். பறவைகளில்தாடைகளோ பற்களோ கிடையாது. மாறாக நன்கு படிமலர்ந்த அலகுகள் அமைந்துள்ளன. இதுவும் மிகமிக இலேசானதாகும். பறவைகளின் இளம்பார்ப்புகளின் அலகுகளில் முட்டைப்பல் எனும் நீட்சி காணப்படுகிறது. இது அவை அடைமுட்டையில் இருந்து வெளிப்பட உதவுகிறது.
கடல் பாலூட்டிகள்
கடற்பாலூட்டிகள் நீரில் நீந்துவதற்கேற்ப, பின்னங்கால்கள் திமிங்கிலம் போல அருகித் தேய்ந்துவிடுகின்றன; அல்லது சீல்களினைப் போல ஒற்றை மீந்துடுப்பாக ஒருங்கிவிடுகின்றன. திமின்கிலத்தில், கழுத்து முள்ளெலும்புகள் பிணைந்துவிடுகின்றன. இத்தகவமைப்பு, நீந்துவதற்கான நிலைப்பையும் நெகிழ்வையும் அளிக்கிறது.[5][6]
மாந்தர்கள்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/02/Leonardo_Skeleton_1511.jpg/220px-Leonardo_Skeleton_1511.jpg)
எலும்பும் குருத்தெலும்பும்
எலும்பு
குருத்தெலும்பு
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/df/Wikibooks-logo-en-noslogan.svg/40px-Wikibooks-logo-en-noslogan.svg.png)