யாஸ் பண்பாடு
யாஸ் பண்பாடு (Yaz culture) [1]) நடு ஆசியாவின் பண்டைய பிரதேசங்களான மார்கியானா, பாக்திரியா மற்றும் சோக்தியானாவில் துவக்க இரும்புக் காலத்தில் கிமு 1500 முதல் கிமு 500 முடிய விளங்கிய இந்தோ-ஈரானியப் பண்பாடாகும்.[2][3][4][5][6][7][8] பிந்தைய செப்புக் காலத்தில் பாக்திரியா-மார்க்கியானா தொல்லியல் வளாகம் சிறப்புடன் விளங்கியது. யாஸ் பண்பாட்டுக் காலத்தில் கற்கோபுரங்கள், வடிகால் வசதி கொண்ட குடியிருப்புகள், மட்பாண்டத் தயாரிப்பு சக்கரங்கள், பீங்கான் பாத்திரங்கள் கொண்டிருந்தது.
ஈட்டி முனைகளில் கூர்மையான வெண்கலம் அல்லது இரும்பு பாகங்கள், இரும்பு அரிவாள்கள் மற்றும் கத்திகள் பயன்படுத்தினர்.[9][10][11]பண்ணை அரண்மனைகள், உலோகவியல், பீங்கான் இப்பண்பாட்டில் விளங்கியது. [12][13]
யாஸ் பண்பாட்டில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் கல்லறைகள் காணப்படவில்லை. இப்பண்பாட்டுக் காலத்தில் சொராட்டிரிய நெறிப்படி, இறந்தவர்களின் உடல்களை மேடான இடங்களில் வைத்துவிடுவது வழக்கம். [2][14][15][16]