மொரதாபாத் கலவரம், 1980
மொரதாபாத் கலவரம் (Moradabad riots) 1980 ஆம் ஆண்டு ஆகஸ்டு மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள மொரதாபாத் நகரில் நடந்தது. இஸ்லாமியர்கள் காவல்துறையினரை தாக்கியதன் பதிலாக ஏற்பட்ட காவல்துறைத் தாக்குதலில் பல இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
மொரதாபாத் கலவரம், 1980 | |||
---|---|---|---|
![]() வரைபடத்தில் மொரதாபாத் | |||
தேதி | ஆகஸ்டு 1980 | ||
அமைவிடம் | மொரதாபாத், உத்திரப் பிரதேசம் இந்தியா | ||
முறைகள் | கொலை மற்றும் கொள்ளை | ||
தரப்புகள் | |||
|
பின்னணி
1980 ஆண்டு ஆகஸ்டு மாதம் ஈகைநாள் வழிபாட்டின் போது தலித்துகள் பகுதியிலிருந்து பன்றி ஒன்று 50,000 இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த பகுதிக்குள் சென்றது.[1] இதனால் ஆத்திரமுற்ற இஸ்லாமியர்கள் காவல்துறையினரின் மீது தாக்குதல் நடத்தினர்.[2] இதில் உயர் காவல்துறை ஆய்வாளர் (Senior Superintendent of Police-SSP) கற்களால் தாக்கப்பட்டார். மேலும் இஸ்லாமியர்களால் கூடுதல் மாவட்ட நீதிபதி (Additional District Magistrate-ADM) அடித்துக் கொல்லப்பட்டார்.[3] இக்கலவரத்தைக் கையாளும் பொருட்டு காவல்துறையினரின் பதில் நடவடிக்கையில் பல இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டு மரணமடைந்தனர்.[4] அரசு சுமார் 400 உயிரிழந்த இஸ்லாமியர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கியது.[4]