முடியெட்டு
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
முடியெட் (Mudiyett ) அல்லது முடியெட்டு என்பது கேரளாவைச் சேர்ந்த ஒரு பாரம்பரிய சடங்கு நாடகம் ஆகும். மேலும் இது நாட்டுப்புற நடன நாடகம் ஆகும். இது காளி தெய்வத்திற்கும் தாரிகா என்ற அரக்கனுக்கும் இடையிலான போரின் புராணக் கதையை சொல்கிறது . சடங்கு என்பது பகவதி அல்லது பத்ரகாளி வழிபாட்டின் ஒரு பகுதியாகும். அறுவடை காலத்திற்குப் பிறகு பிப்ரவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையில் அன்னை தேவியின் கோயில்களான பத்ரகாளி கோயில்களில் இந்த நடனம் நிகழ்த்தப்படுகிறது. 2010ஆம் ஆண்டில் முதியெட்டு யுனெஸ்கோவின் மனிதநேயத்தின் கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதி பட்டியலில் வகைபடுத்தப்பட்டுள்ளது. இது கூடியாட்டத்திற்குப் பிறகு கேரளாவிலிருந்து வந்த இரண்டாவது கலை வடிவமாகும். [1]
தாரிகா என்பவன் பிரம்மாவிடமிருந்து ஒரு வரத்தைப் பெற்ற ஒரு அரக்கன் ஆவான். இந்து புராணங்களின்படி பதினான்கு உலகங்களிலும் உள்ள எந்த ஒரு ஆணாலும் தன்னை ஒருபோதும் தோற்கடிக்ககூடாது என்ற ஒரு வரத்தை வேண்டிப் பெற்றான். இது தாரிகாசுரனை மிகுந்த சக்திவாய்ந்தவராகவும் ஆணவம் அதிகமானமாகவும் ஆக்கியது. இந்த வரத்துடன் ஆயுதம் ஏந்திய தாரிகாசுரன், தேவர்களின் அரசனானா இந்திரனைக் தோற்கடித்து இந்திர லோகத்தை வெற்றிக் கொண்டான். அவனது அட்டூழியங்கள் தாங்கமுடியாததால், நாரத முனிவர் கடவுள் சிவனிடம் தாரிகாசுரனைக் கட்டுப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார். சிவனும் ஒப்புக்கொண்டு, தாரிகாசுரன் காளி தெய்வத்தால் கொல்லப்படுவான் என்று அறிவித்தார். இதன்படி பிரம்மாவின் வரத்தைத் தாண்டி ஒரு பெண்ணான காளி தாரிகாசுரனை தண்டித்தாள். பதினான்கு உலகங்களைச் சேர்ந்த ஆண்களிடையே காளியை கணக்கிடக்கூடாது.
முடியெட்டு என்பது கேரளாவின் திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் உள்ள மரார் மற்றும் குருப்பு சமூகங்களைச் சேர்ந்தவர்களால் நிகழ்த்தப்படும் ஒரு கிராம சடங்காகும். இதில், முழு சமூகமும் அதற்கு பங்களிப்பு செய்கிறது மற்றும் பங்கேற்கிறது. முடியெட்டு ஆண்டுதோறும் தெய்வத்தின் கோயில்களான பகவதி காவுகளான, சாலக்குடி ஆறு, பெரியாறு மற்றும் மூவாட்டுப்புழை போன்ற நதிக்கரைகளில் அமைந்துள்ள வெவ்வேறு கிராமங்களில் நடத்தப்படுகிறது. [2]
காளி நடனம் நிகழ்த்துவதில் ஒத்திகை அல்லது முன் தயாரிப்பு எதுவும் இருப்பது இல்லை. சிவன், நாரதர், அரக்கன் தனவான் மற்றும் தாரிகன் முதல் காளி வரை இயல்பானதாகவே இச்செயல் திறன் இருக்கும். ஒரு முழுமையான முடியெட்டு செயல்திறனுக்கு மொத்தம் 16 நபர்கள் தேவைப்படுகிறார்கள் - இதில் தாளவாதிகள், கலமெழுத்துக் கலைஞர்கள், பாடகர்கள் போன்றோர். [3] முடியெட்டுவின் உடை மற்றும் செயல்திறன் பாணிகளில் பிராந்திய வேறுபாடுகள் தெளிவாக உள்ளன. இவ்வாறு, கோராட்டி பாணியில், காளி ஒரு வெறும் உடற்பகுதியை வெளிப்படுத்துகிறார். கீழிளம் மற்றும் பழூர் பாணிகளில் மார்பக வடிவிலான பலகையால் மட்டுமே மூடப்பட்டிருக்கும். அவர் முழு உடலையும் உடைகளால் மறைத்திருப்பார். இதேபோல், கோரட்டி பாணியில், தாரிகாவின் கூந்தல் கதகளிகிரீடத்தை ஒத்திருக்கிறது. மேலும் அவரது முகம் கதகளியின் கதி வேஷங்களை வரைகிறது. முடியெட்டு கதகளியை ஒத்திருந்தாலும், இரண்டு வடிவங்களும் எவ்வாறு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. கி.பி. 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டு வரை கூட அதன் பரிணாம வளர்ச்சியை ஒரு கலையாக கல்வெட்டியல் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.[4]
முடியெட்டு என்பது ஒரு பல்வேறு சாதியினரின் ஒரு முயற்சியாகும். இதில் கிராமத்தின் ஒவ்வொரு சாதியும் ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தை வகிக்கிறது. முரசுக்கான மூங்கில் கலைப்பொருட்கள் மற்றும் தோல் மறைப்புகள் பறையர் சாதியினரால் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் தண்டன் சாதி முகமூடிகள் மற்றும் தலைக்கவசங்களுக்குத் தேவையான பாக்கு மட்டைகளை கொண்டுவருகிறது. கணகா சமூகம் முகமூடிகளை வரைகிறது. அதே நேரத்தில் குருவன் சமூகம் தீப்பந்தங்களை எரிக்க வைக்கிறது. தெய்வத்தின் ஆடைகளைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் துணிகளைக் துவைப்பது வேலுதேதன் (பாட்டியன்) சாதி. அதே நேரத்தில் மரான் சாதி ஜோதிகளைத் தயார் செய்து அவற்றை எண்ணெயுடன் தருகிறது.
இவ்வாறு கிராமத்தில் உள்ள ஒவ்வொரு சாதியும் அதன் பாரம்பரிய சாதிப் பாத்திரத்தின் படி திருவிழாவிற்கு பங்களிப்பு செய்கின்றன. சடங்கில் ஒவ்வொரு சாதியினரும் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் கூட்டு பங்கேற்பு சமூகத்தில் பொதுவான அடையாளம் மற்றும் பரஸ்பர பிணைப்பை ஏற்படுத்துகிறது மற்றும் பலப்படுத்துகிறது. [5]
ஒரு சமூக அடிப்படையிலான கலை வடிவமாக இருப்பதால், கலை வடிவத்தை பாதுகாக்க அடுத்த தலைமுறையை பாரம்பரியமாக ஊக்குவித்து பயிற்சியளித்த சமூகம் இது. இந்த கலை வடிவத்தில் பயிற்சி அளிக்க எந்த பள்ளியும் நிறுவனமும் இல்லை. அதன் உயிர்வாழ்வு கிட்டத்தட்ட குரு-சீடர் பரம்பரை மூலம் நேரடி பரிமாற்றத்தை மட்டுமே சார்ந்துள்ளது. [5]