மிசாரி ராசித் அல்-அபாசி


மிசாரி பின் ராசித் அல்-அபாசி (Mishary Bin Rashid Alafasy, அரபு மொழி: الشيخ مشاري بن راشد العفاسي‎; பிறப்பு: 5 செப்டம்பர் 1976) என்பவர் குவைத் நாட்டைச் சேர்ந்த ஒரு இசுலாமியப் பாடகர், இமாம், மற்றும் அறவுரையாளர் ஆவார்.[1] இவர் 1992-1994ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட இரண்டு வருடங்களுள் குர்ஆனை மனனமிட்டவராவார். மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் அல்- குர்ஆன் கற்கைகள் பீடத்தில் பயின்று அல்- குர்ஆன் ஓதல் முறைமைக்கான 10 அறிவிப்புக்களிலும் விஷேட கற்கையைப் பூர்த்தி செய்தார். முதன் முறையாக ஹி 1416ம் ஆண்டு " அல்- ஹாபிர், புஸ்ஸிலத், அல்- ஷூரா " என்ற மூன்று அத்தியாயங்களை உள்ளடக்கிய அவரது குர்ஆன்ஓதல் வெளியிடப்பட்டது. முதன் முறையாக ஹி 1420ம் ஆண்டு குவைத்தின் அல்- மஸ்ஜித் அல்- கபீர் எனப்படும் பள்ளிவாயலில் ரமழான் இறுதிப் பத்தில் மக்களுக்கு தொழுகை நடத்தினார்.

மிசாரி ராசித் அல்-அபாசி
Mishary Rashid Alafasy
பிறப்புமிஷாரி இப்னு ராஷித் இப்னி கரீப் இப்னி முஹம்மத் இப்னி ராஷித் அல்- அபாஸி
செப்டம்பர் 5, 1976 (1976-09-05) (அகவை 47)
குவைத் நகரம், குவைத்
இருப்பிடம்குவைத் நகரம், குவைத்
மற்ற பெயர்கள்அபூ நூர்
பணிகுவைத் அல்-மஸ்ஜித் அல்-கபீர் பள்ளிவாயலின் இமாம், குவைத் அவ்காப், இசுலாமிய அலுவல்கள் அமைச்சின் கதீப்
அறியப்படுவதுஇசுலாமியப் பாடகர், காரி
பிள்ளைகள்2 ஆண்கள், 3 பெண்கள்
வலைத்தளம்
www.alafasy.me

மேற்கொண்டுள்ள பணிகள்

குர்ஆன்

  • அல்- அபாஸி அலைவரிசைக்கூடாக பத்து விதமான குர்ஆன் ஒதல் முறைமைகளையும் மக்கள் மயப்படுத்தப்பட்ட பெரும் முயற்சி எடுக்கின்றார்கள்.
  • மத்னுஷ் ஷாதிபிய்யஹ், மத்னுத் துர்ரஹ், அல்- துஹ்பா அல்- ஸமன்னூதிய்யஹ் போன்ற முக்கிய கிராஅத் மற்றும் தஜ்வீத் சட்டங்களுடன் தொடர்புடைய சிறிய நூல்களின் ஒலிப்பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
  • ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா போன்ற நாடுகளில் குர்ஆன் தொடர்பான போட்டிகளில் நடுவராகப் பங்குகொண்டார்.
  • ரத்தில் மஅல் அபாஸி, கலௌனா மஆஹு போன்ற சில குர்ஆன் கற்பித்தல் திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்துகின்றார்.
  • அல்- குர்ஆன் ஓதற்கலை தொடர்பான பல கருத்தரங்குகளையும் உரைகளையும் ஆற்றியுள்ளார்.
  • அல்- அபாஸி வக்பு திட்டம், ஹாபிழ்களை உருவாக்கும் திட்டம், அல்- குர்ஆன் கற்கைகளுக்கான பிரித்தானிய அகாதமி போன்ற திட்டங்களைத் தீட்டி கண்காணிப்புச் செய்கின்றார்.

இஸ்லாமிய பாடல் துறை

  • முதன் முறையாக 2013ம் ஆண்டு " அயா மய் யத்தஇல் பஹ்ம " என்ற வரிகளைக்கொண்ட ஒரு பாடலை வெளியிட்டார். அப்பாடல் மக்கள் மன்றத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுவே இஸ்லாமிய பாடல் துறையில் இவர் பணிக்காக வித்தாகவும் இருந்தது எனலாம்.
  • அதன் தொடரில் " உயூனுல் அபாஈ " எனும் ஆல்பம் ஒன்றை முதற் தடவையாக வெளியிட்டார்.

இதற்கெல்லாம் முன்பாக 2002, 2003, 2006ம் ஆண்டுகளில் தஜ்வீத் நூல்களை கவிகளாகப் பாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்