மால்டா மகளிர் கல்லூரி
வகை | அரசு உதவிபெறும் இளங்கலைக் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1970 |
சார்பு | கவுர் பங்கா பல்கலைக்கழகம் |
முதல்வர் | முனைவர்.மந்திரா சக்ரவர்த்தி |
அமைவிடம் | சாந்தி கோபால் சென் சரனி, பிரோஜ்பூர் , , , 732101 , 24°59′53″N 88°08′15″E / 24.9979964°N 88.1374593°E |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையதளம் | கல்லூரி இணையதளம் |
படிமம்:Malda Women's College.jpg | |
மால்டா மகளிர் கல்லூரி, என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் 1970 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட[1], ஒரு பெண்கள் கல்லூரி ஆகும். கலைகளில் இளங்கலைப் படிப்புகளை வழங்கும் இக்கல்லூரியானது ஆரம்பத்தில் வடக்கு வங்காள பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்தது, பின்னர் 2007 இல் கவுர் பங்கா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டபோது, அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது [2]
துறைகள்
- பெங்காலி
- ஆங்கிலம்
- வரலாறு
- நிலவியல்
- அரசியல் அறிவியல்
- தத்துவம்
- சமூகவியல்
- கல்வி
- பொருளாதாரம்
- பெண்கள் ஆய்வுகள்(பொது) [3]
அங்கீகாரம்
மால்டா மாவட்டத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள ஒரே பெண்களுக்கான கல்லூரியான இது, தொடங்கப்பட்டதிலிருந்து அங்குள்ள பெண்களின் கல்வித் தேவைகளுக்கு சேவை செய்து வரும் இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் (யுஜிசி) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 2004 ஆம் ஆண்டு முதல் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் வழிமுறைகளை பின்பற்றிவருகிறது. 2017 ஆம் ஆண்டில் பி+ தரத்தையும் பெற்றுள்ளது. [4]