புருசோத்தம் லட்சுமண் தேசுபாண்டே
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
புருசோத்தம் லட்சுமண் தேசுபாண்டே | |
---|---|
![]() | |
பிறப்பு | 8 நவம்பர் 1919 மும்பை |
இறப்பு | 12 சூன் 2000 (அகவை 80) புனே |
படித்த இடங்கள் |
|
பணி | எழுத்தாளர் |
வேலை வழங்குபவர் | |
விருதுகள் | சாகித்திய அகாதமி விருது |
இணையம் | http://puladeshpande.net |
புருசோத்தம் லட்சுமண் தேசுபாண்டே [1] [2] (Purushottam Laxman Deshpande) [3] [4] (பிறப்பு: 1919 நவம்பர் 8 - இறப்பு: 2000 சூன் 12 [5] ), தனது பெயரிலுள்ள முதலெழுத்துக்களால் (" பு. ல ") என பிரபலமாக அறியப்பட்டார். இவர் இந்தியாவின் மகாராட்டிராவைச் சேர்ந்த மராத்திய எழுத்தாளர் மற்றும் நகைச்சுவையாளர் என அறியப்பட்டார். மேலும் ஒரு திறமையான திரைப்பட மற்றும் மேடை நடிகர், திரைக்கதை எழுத்தாளர், எழுத்தாளர், இசையமைப்பாளர், இசைக்கலைஞர் (ஆர்மோனியம் வாசிப்பவர்), பாடகர் மற்றும் சொற்பொழிவாளர் என பன்முகக் கலைஞராகவும் இவர் இருந்தார். பெரும்பாலும் "மகாராட்டிராவின் அன்பான ஆளுமை" என்று அழைக்கப்பட்டார். [6]
தேசுபாண்டேவின் படைப்புகள் ஆங்கிலம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. [7]
புருசோத்தம் மும்பையின் சௌபதி,காந்தேவி தெருவில் உள்ள தன்வாலாசு சாவ்லில் ஒரு கவுட சாரஸ்வத் பிராமணக் குடும்பத்தில் லட்சுமண் திரிம்பக் தேசுபாண்டே மற்றும் லட்சுமிபாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தாய்வழி தாத்தா, வாமன் மங்கேசு துபாசி, ஒரு கவிஞரும் மற்றும் இலக்கியத்தின் இணைப்பாளராகவும் இருந்தார். ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலியை மராத்தியில் "அபாங் கீதாஞ்சலி" என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருந்தார்.[8]
இந்த குடும்பம் மும்பையில் உள்ள கிராண்ட் சாலை வட்டாரத்தில் உள்ள இல்லத்தில் தங்கியிருந்தது. பின்னர் இவரது குடும்பத்தினர் ஜோகேசுவரிக்கு குடிபெயர்ந்தனர். புதிதாக உருவான சரஸ்வதி தோட்ட காலனியில் இவரது முதல் 8 ஆண்டுகள் பற்றி இவரது புர்ச்சுண்டி புத்தகத்தில் 'பால்பானிச்சா கால் சுகாச்சா' அல்லது பால்பாசிகா காஸ் சுகேசி (மொழிபெயர்ப்பு: குழந்தை பருவத்தின் மகிழ்ச்சியான நாட்கள்) என்ற தலைப்பில் வெளியான கதையில் விவரிக்கப்பட்டுள்ளது. பின்னர் குடும்பம் வைல் பார்லேவுக்கு குடிபெயர்ந்தது.. [9]
தேசுபாண்டே பார்லே திலக் வித்யாலயாவில் படித்தார். உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு இஸ்மாயில் யூசுப் கல்லூரியிலும், பின்னர் சட்டங்களில் இளையர் படிக்க மும்பை அரசு சட்டக் கல்லூரிக்குச் சென்றார். பின்னர் இவர் புனேவில் உள்ள ஃபெர்குசன் கல்லூரியில் பயின்றார். 1950 இல் தனது கலையில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் சாங்கலியில் உள்ள வில்லிங்டன் கல்லூரியில் தனது கலையில் முதுகலை பட்டம் பெற்றார். [10] பாஸ்கர் சங்கீதாலயாவின் தத்தோபந்த் ராஜோபாதியிடமிருந்து ஆர்மோனியம் வாசிப்பதில் பயிற்சிகளையும் பெற்றார். .
இவரது முதல் மனைவி (கர்ஜாட்டில் உள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சுந்தர் திவாகர் என்பவரின் முன்னாள் மனைவி) திருமணத்திற்குப் பிறகு 1940 களின் முற்பகுதியில் இறந்தார். பின்னர், 1946 இல் சூன் 12, தேசுபாண்டே தனது சகாவான சுனிதா தாகூரை மணந்தார். [11] தாகூர் தனது சொந்த முயற்சியில் ஒரு திறமையான எழுத்தாளராக மாறினார். [12] இத்தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. இவர்கள் தங்கள் மருமகன் தினேசு தாக்கூரை தங்கள் சொந்த மகனைப் போலவே நேசித்தார்கள்.
தேசுபாண்டே மற்றும் இவரது மனைவி இருவரும் மும்பையின் ஓரியண்ட் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றினர். கர்நாடகாவின் பெல்காம், இராணி பார்வதி தேவி கல்லூரி மற்றும் மும்பையின் கீர்த்தி கல்லூரியில் பேராசிரியராக சில ஆண்டுகள் பணியாற்றினர். புதிதாக நிறுவப்பட்ட அரசுக்கு சொந்தமான இந்திய தொலைக்காட்சியான தூர்தர்ஷனிலும் பணியாற்றினார். அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவை இந்திய தொலைக்காட்சியில் பேட்டி கண்ட முதல் நபர் இவர்தான். ஒரு வருட கால பயிற்சிக்காக பிபிசிக்கு சென்ற இரண்டாம் நபராவார். அதன் பிறகு இவர் பிரான்சிலும் மேற்கு ஜெர்மனியிலும் சிறிது காலம் செலவிட்டார். இந்த குறிப்பிட்ட காலகட்டம் மற்றும் இந்த நாடுகளில் தங்கியிருப்பதுதான் இவரது பிற்கால பயணக் குறிப்பான " அபூர்வய் " அடிப்படையாகக் கொண்டது. இவரது மற்ற பயணக் கதைகளில் ”" பூவரங்கா "மற்றும் ஜாவே தியாஞ்ச்யா தேஷா ஆகியவை அடங்கும் . [9]
பு ல தேசுபாண்டே ஒரு திறமையான இந்துஸ்தானி பாரம்பரிய இசைக்கலைஞர் ஆவார் . இவர் ஒரு எழுத்தாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், இயக்குனர், இசை இயக்குனர் மற்றும் பாடகர் என புகழ் பெற்றார். அவர் பல பரோபகார நடவடிக்கைகளில் பங்கேற்றார் [13] [9]
நடுக்குவாத நோயால் ஏற்பட்ட சிக்கல்களால் தேசுபாண்டே 2000 சூன் 12 அன்று மகாராட்டிராவின் புனேவில் தனது 80 ஆவது வயதில் இறந்தார். 2009 இல் இவருடைய மனைவி சுனிதா இவர்களின் 54 வது திருமண ஆண்டு நாளில் இறந்தார். [14]