பிருத்திவிராஜ் தொண்டைமான்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிருத்திவிராஜ் தொண்டைமான் (Prithviraj Tondaiman, பிறப்பு: 6 சூன் 1987) என்பவர் ஒரு இந்திய குறி பார்த்துச் சுடுதல் விளையாட்டு வீராராவார். இவர் டிராப் பிரிவில் போட்டியிடுகிறார். இவர் சீனாவின், காங்சூவில் நடந்த 2022 ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய துப்பாக்கி சுடும் குழுவில் இடம்பெற்றார்.[1]
பிருத்திவிராஜ் தொண்டைமான் புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த இரா. ராஜகோபால தொண்டைமான் மற்றும் திருச்சிராப்பள்ளி மாநகர மேயராக இருந்த சாருபாலா தொண்டைமான் ஆகியோரின் மகனாவார்.[2]