பித்தூர்
பித்தூர் (Bithoor or Bithur), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின், கான்பூர் நகரத்திலிருந்து 23.4 கி. மீ., தொலைவில் கங்கை ஆற்றின் கரையில் அமைந்துள்ள சிறு நகரமாகும். இவ்விடம் இந்துக்களின் புனித இடமாக கருதப்படுகிறது. பித்தூர் இலவன் மற்றும் குசன் ஆகியவர்களின் பிறப்பிடமாகும். இவ்விடத்தில் வான்மீகி முனிவரின் ஆசிரமம் அமைந்துள்ளது.
பித்தூர் பிரம்மவர்த்தம் | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப்பிரதேசம் |
மாவட்டம் | கான்பூர் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 9,647 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி, உருது, அவதி & ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
தொலைபேசி குறியீட்டு எண் | 0512 |
வாகனப் பதிவு | UP-78 |
இணையதளம் | Official Website |
வரலாறு
இந்திய விடுதலை இயக்கத்திற்கு குறிப்பாக 1857 இந்திய சிப்பாய் கிளர்ச்சிக்கு அதிக தொடர்புடையது பித்தூர். பிரித்தானிய கம்பெனி ஆட்சியின் போது மராத்திய மன்னர் பேஷ்வா பாஜி ராவ் பித்தூருக்கு துரத்தப்பட்டார். பாஜி ராவின் தத்து மகன் நானா சாகிப் பித்தூர் நகரத்தை மராத்திய அரசின் தலைநகராக அமைத்தார். 19 சூலை 1857இல் கிழக்கிந்திய இராணுவம் பித்தூர் நகரத்தை கைப்பற்றியது.[1][2][3]
மக்கள்
2001ஆம் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, பித்தூரின் மக்கட்தொகை 9647 ஆகும். அதில் ஆண்கள் 55%, பெண்கள் 45% கொண்டுள்ளனர். எழுத்தறிவு விகிதம் 62% ஆகும்.[4]