நைனித்தால் ஏரி
நைனித்தால் ஏரி (Nainital Lake) என்றறியும் இவ்வேரி, இந்தியாவின் வட மாநிலமான உத்திரகாண்டில் இமாலயத்தின் வெளிப்புற குமோன் மலைப்பிரதேச பகுதியிலுள்ள, நைனித்தால் எனும் நகரருகே இயற்கை நன்னீர் ஏரியாக அமைந்துள்ளது. மேலும், அழகமைப்புக் கலையுடன், சிறுநீரக வடிவம் அல்லது பிறை வடிவம் போன்ற அமைப்புடன் கூடிய இது, தென்கிழக்கு இறுதியில் ஒரு ஆறு முதலானவற்றின் வடிகால் வசதியுடன் உள்ளது.[1][2][3]
நைனித்தால் ஏரி Nainital Lake | |
---|---|
![]() உத்தராகண்டம் நைனித்தால் ஏரியின் அழகிய காட்சி | |
அமைவிடம் | உத்தராகண்டம் |
ஆள்கூறுகள் | 29°24′N 79°28′E / 29.4°N 79.47°E |
வகை | இயற்கை நன்னீர் |
வடிநில நாடுகள் | ![]() |
அதிகபட்ச நீளம் | 1,432 m (4,698 அடி) |
அதிகபட்ச அகலம் | 457 m (1,499 அடி) |
மேற்பரப்பளவு | 48.76 ha (120.5 ஏக்கர்கள்) |
அதிகபட்ச ஆழம் | 27.3 m (90 அடி) |
நீர்தங்கு நேரம் | 1.16 ஆண்டுகள் |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 1,938 m (6,358 அடி) |
குடியேற்றங்கள் | நைனித்தால் |
ஏரி மாவட்டம்
வடஇந்திய ஏரி மாவட்டம் என்றழைக்கப்படும் நைனித்தால் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஏரி, குமோன் மலை பிராந்தியத்தில் உள்ள நான்கு ஏரிகளில் ஒன்றாகும், சாத்தலை ஏரி, பீம்தால் ஏரி, மற்றும் நுகுசியாதால் ஏரி என மற்ற மூன்று ஏரிகள் இவ்வேரியருகேயுள்ளன.[4]
வரலாறு
வரலாற்று ஆவணங்களின்படி 1839-ல் ஆங்கிலேய வியாபாரியான பி. பரோன் ( P. Barron) என்பவர் சர்க்கரை வர்த்தகம் செய்ய இப்பகுதியில் விஜயம் செய்ததாவும், அங்கே தங்கிருந்த அவர், தற்செயலாக குமோன் மலை பகுதிக்கு வேட்டையாட சென்றபோது நைனித்தால் ஏரியின் நீர் நிறைந்த காட்சியால் வசீகரிக்கப்பட்டு, அங்கே ஒரு ஐரோப்பிய காலனியை நிர்மாணிக்க தீர்மானித்தார்.[5]