தெற்குச் சமவெளி கல்லூரி
தெற்குச் சமவெளி கல்லூரி என்பது மேற்கு வங்காள அரசின் வேண்டுகோளின் பேரில், ஆகஸ்ட் 1961 ஆம் ஆண்டில் டாக்டர் பிதான் சந்திர ராய் அவர்களால் மலைப்பகுதி பெண்களின் முன்னேற்றத்திற்காக லோரெட்டோ கல்லூரி என டார்ஜிலிங் பகுதியில் பெண்கள் கல்லூரியாக நிறுவப்பட்டது.[1] ஆரம்பத்தில் அக்கல்லூரியின் தாயமைப்பான புனித கன்னி மேரி நிறுவனத்தின் ஐரிசு கிளை இக்கல்லூரியின் நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள ஒப்புக்கொண்டாலும் [2] போதிய பணியாளர்கள் இல்லாததால், இக்கல்லூரியை மேற்கு வங்க அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து இக்கல்லூரி தெற்குச் சமவெளி கல்லூரி என பெயர் மாற்றப்பட்டது.
குறிக்கோளுரை | கல்வியின் மூலம் அறிவொளி, அதிகாரமளித்தல் மற்றும் விடுதலை |
---|---|
வகை | இளங்கலை கல்லூரி |
உருவாக்கம் | 1961 |
சார்பு | வடக்கு வங்காள பல்கலைக்கழகம் |
முதல்வர் | முனைவர் அனுராதா ராய் |
அமைவிடம் | மால் சாலை, சௌக் பஜார், , , , 734101 , 27°02′49″N 88°16′03″E / 27.0469445°N 88.2674112°E |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையதளம் | கல்லூரி இணையதளம் |
"பொறுப்பான" சுதந்திரத்தைப் பயன்படுத்துவதற்கான வளர்ச்சியை ஊக்குவித்தல், மனித ஆளுமைக்கு மரியாதை மற்றும் உண்மையான மதிப்புகளைப் பாராட்டுதல் போன்ற நோக்கங்களை முதன்மையாகக் கொன்டு இக்கல்லூரி இயங்கிவருகிறது.
அங்கீகாரம்
2016 ஆம் ஆண்டில் இக்கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் (NAAC) 'ஏ' தர அங்கீகாரம் பெற்றுள்ளது.
கல்லூரியின் சார்பாக வெளியிடப்படும் இதழின் பெயர் சூழல் (லத்தீன்:Contextures) என்பதாகும். [3] இந்த இதழில் ஆங்கிலம், நேப்பாளி, பெங்காலி மற்றும் இந்தி மொழிகளில் உள்ளடக்கங்கள் உள்ளன, இது மாணவர்களின் இலக்கிய திறன்களை வெளிப்படுத்த உதவ நடத்தப்படுகிறது.
படத்தொகுப்பு
- கல்லூரி நுழைவாயில்