திருமுறை கண்ட புராணம்

திருமுறை கண்ட புராணம் [1] என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இந்த நூலை உமாபதி சிவாசாரியார் செய்தார் என்னும் கருத்து நெடுங்காலமாக நிலவிவருகிறது. இதனைச் சரி என ஏற்பதற்கோ, தவறு எனத் தள்ளுவதற்கோ போதிய சான்றுகள் இல்லை.

இந்தப் புராணம் 46 பாடல்களைக் கொண்டுள்ளது. திருநரையூரில் பிறந்த நம்பியாண்டார் நம்பி மன்னன் இராசராசன் வேண்டுகோளுக்கு இணங்கித் தில்லைச் சபையின் மேற்குப் பக்கத்தில் காப்பிடப்பட்டிருந்த திருமுறைகளை வெளிப்படுத்தி, இறைவன் கட்டளைப்படி அவற்றிற்குப் பண் வகுத்த வரலாற்றை இந்த நூல் கூறுகிறது.

இந்த நூலின் கடைசிப் பாடல்

சீராரும் திருமுறைகள் கண்ட திறப் பார்த்திபனாம்
ஏராரும் இறைவனையும் எழில் ஆரும் நம்பியையும்
ஆராத அன்பினுடன் அடிபணிந்து அங்கு அருள் விரவச்
சோராத காதல் மிகும் திருத்தொண்டர் பதம் துதிப்பாம்.

அடிக்குறிப்பு

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்