டியூக்கோலியான்
கிரேக்கத் தொன்மவியலின் படி, டியூக்கோலியான் (Deucalion (/djuːˈkeɪliən/; கிரேக்கம்: Δευκαλίων) என்பவர் பிரோமிதியசின் மகன்; பழங்கால ஆதாரங்கள் இவரது தாயை கிளைமீன், ஹெஸியோன் அல்லது பிரோனோயா என்று குறிப்பிடுகின்றன. [1] [2] இவர் கிரேக்க தொன்மவியலில் ஊழிவெள்ளப் பெருங்கதையுடன் நெருங்கிய தொடர்புடையவர்.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/41/Deucalion.jpg/200px-Deucalion.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/06/Virgil_Solis_-_Deucalion_Pyrrha.jpg/250px-Virgil_Solis_-_Deucalion_Pyrrha.jpg)
குடும்பம்
டியூகாலியனுக்கும் பைராவுக்கும் குறைந்தது இரண்டு குழந்தைகளாக ஹெல்லன் மற்றும் பிரோடோஜீனியா, [3] மற்றும் மூன்றாவது, ஆம்ஃபிக்டியோன் [4] (பிற மரபுகளில் இவர் தொல் குடிமகன் )
இவரின் குழந்தைகள் குறித்து பழமையான நூல்களில் ஒன்றான கேட்டலாக் ஆப் உமன் என்ற நூலில் பண்டோரா மற்றும் தியா மற்றும் குறைந்தபட்சம் ஒரு மகனான ஹெல்லன் ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர். [5] அவர்களின் சந்ததியினர் தெசலியில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
ஒரு தரவானது டியூகாலியனின் மூன்று மகன்களையும் அவர்களது மனைவியையும் ஓரெஸ்தியஸ், மராத்தோனியோஸ் பிரோனஸ் (ஹெல்லனின் தந்தை) என்று குறிப்பிடுகிறது. [6] [7] சில தரவுகளில், டியூக்கோலியானுக்கு மற்றொரு பிள்ளையாக மெலாந்தோ இருந்தார்.