செம்மீன் (திரைப்படம்)

தகழி சிவசங்கரப் பிள்ளையின் செம்மீன் என்னும் நாவலின் கதையை மூலமாகக் கொண்டு, 1965-ல் ராமு கார்யாட்டு இத்திரைப்படத்தை இயக்கினார். மது, சத்யன், கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர், ஷீலா, எஸ். பி. பிள்ளை, அடூர் பவானி, பிலோமின ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.

செம்மீன்
சுவரிதழ்
இயக்கம்ராமு கார்யாட்டு
தயாரிப்புபாபு இஸ்மயில் சேட்டு
மூலக்கதைசெம்மீன்
படைத்தவர் தகழி சிவசங்கரப் பிள்ளை
திரைக்கதைஎஸ்.எல். புரம் சதானந்தன்
இசைசலில் சௌதுரி
நடிப்பு
ஒளிப்பதிவுமார்கஸ் பார்ட்லி[1]
யு. ரா‍ஜகோபால்
படத்தொகுப்புஇருசிகேசு முகர்ச்சி
கே. டி. ஜோர்ஜ்
கலையகம்கண்மணி பிலிம்ஸ்
விநியோகம்கண்மணி பிலிம்ஸ்
வெளியீடு1965 ஆக்ஸ்டு 19
நாடுஇந்திய
மொழிமலையாளம்

1965-ல் சிறந்த திரைப்படத்திற்கான இந்திய அரசின் தங்கத் தாமரை விருது கிடைத்தது.[2].

நடிப்பு

  • சத்யன் – பளனி
  • ஷீலா – கறுத்தம்ம
  • மது – பரீக்குட்டி
  • கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர் – செம்பன் குஞ்ஞு
  • அடூர் பவானி – சக்கி
  • லலா – பஞ்சமி
  • சி. ஆர். ராஜகுமாரி – பாப்பிகுஞ்ஞு
  • அடூர் பங்கஜம்
  • கோட்டயம் செல்லப்பன்
  • பறவூர் பரதன்
  • பிலோமின
  • ஜெ. எ. ஆர். ஆனந்த்
  • கோதமங்கலம் அலி

பாடல்கள்

பாடல் வரிகள்: வயலார் ராமவர்மாஇசை: சலில் சௌதுரி

#பாடல்நீளம்
1. "பெண்ணாளே பெண்ணாளே"   5:39
2. "புத்தன் வலக்காரே"   3:19
3. "மானசமைனே வரூ"   3:12
4. "கடலினக்கரெப் போணோரே"   3:48
5. "தீம் மியூசிக்"   2:20

கதை

ஏழை மீனவனின் மகள் கறுத்தம்மா மற்றும் மொத்த மீன் வியாபாரியும் முஸ்லீம் இளைஞனான பரீக்குட்டி ஆகியோர் படகு அருகே சந்தித்துப் பேசுவதிலிருந்தே கதை தொடங்குகிறது. அவர்களின் காதலுக்குக் கடுமையான சமூகக் கட்டுப்பாடுகளால் தடை ஏற்படுகிறது. இதற்கிடையில் கருத்தம்மாவின் பேராசைபிடித்த பெற்றோர் பரீக்குட்டியிடம் உள்ள பணத்தைவாங்கி சொந்தமாக படகுகள் வாங்கிக்கொண்டு பரிக்குட்டியை ஏமாற்றிவிடுகின்றனர். பரீக்குட்டியை விட்டுப் பிரிந்து திரிகுன்னத்து மீனவன் பழனியை திருமணம் செய்துகொண்டு சென்றுவிடுகிறாள் கறுத்தம்மா. திருமணத்திலிருந்தே கணவனுக்கு உற்ற மனைவியாக அன்பொழுக நடந்துகொள்கிறாள். இருந்தாலும் அவ்வப்போது வரும் பரீக்குட்டியின் நினைவுகளில் இருந்து முடியாமலும் தவிக்கிறாள். இருவரின் மனப்போராட்டங்களுக்குப் பிறகு எதிர்பாராமல் நிகழும் பரீக்குட்டி, கருத்தம்மா ஆகியோரின் சந்திப்பும் அந்த சந்திப்பைக் கடலன்னை எப்படி ஏற்றுக்கொள்கிறாள் என்பதும்தான் கதை.[3]

சான்றுகள்

இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்