சூர் பேரரசு
சூர் பேரரசு (Sur Empire) (பஷ்தூ: د سوریانو ټولواکمني) (ஆட்சிக் காலம்: 1540 - 1556) இந்தியத் துணைக்கண்டத்தின், மேற்கில் தற்கால ஆப்கானித்தான் முதல், கிழக்கில் வங்காள தேசம் வரை ஆண்ட பஷ்தூ மொழி பேசிய சன்னி இசுலாமிய பஷ்தூன்களின் அரசாகும்.[5] சூர் வம்சப் பேரரசர்கள் 1540 முதல் 1556 முடிய 16 ஆண்டுகள் சதாரா மற்றும் தில்லியை தலைமையிடமாகக் கொண்டு ஆண்டனர்[6]முகலாயப் பேரரசர் உமாயூன் ஆட்சிக் காலத்தில் சூர் வம்ச ஆட்சி சில ஆண்டுகள் தடைப்பட்டு நின்றாலும், உமாயூனுக்குப் பிறகு மீண்டும் சூர் வம்ச ஆட்சி நிலைபெற்றது. சூர் வம்சத்தின் புகழ் பெற்ற பேரரசர் சேர் சா சூரி, சூர் வம்சப் பேரரசை நிறுவியவர் ஆவார். [5]இடையில் ஹெமு என்ற இந்துப் போர்ப்படைத்தலைவர் சூர் வம்ச மன்னரை வீழ்த்தி ஒரு மாதம் தில்லியைக் கைப்பற்றி ஆண்டார்.
1538/1540–1556[a] | |||||||||||||
நிலை | பேரரசு | ||||||||||||
தலைநகரம் | சசாராம் | ||||||||||||
பேசப்படும் மொழிகள் | வங்காள மொழி, போச்புரி, இந்தவி, பாரசீக மொழி,[1] பஷ்தூ மொழி (இராணுவம்)[2] | ||||||||||||
சமயம் | சன்னி இசுலாம் | ||||||||||||
அரசாங்கம் | முற்றிலுமான முடியாட்சி | ||||||||||||
பாடிஷா | |||||||||||||
• 1538/1540-1545 | சேர் சா சூரி (முதல்) | ||||||||||||
• 1555-1556 | அடில் ஷா சூரி (கடைசி) | ||||||||||||
வரலாறு | |||||||||||||
• தொடக்கம் | 6 ஏப்ரல் 1538/1540 | ||||||||||||
• சிரிகிந்த் யுத்தம் | 1556[a] | ||||||||||||
|
வரலாறு
சூர் வம்ச நிறுவனரான சேர் சா சூரி 26 சூன் 1539இல் சௌசா போரிலும், 17 மே 1540இல் பில்கிராம் போரிலும் உமாயூனை வென்று,[7]ஆப்கானித்தான் மற்றும் பஞ்சாப் முதல், கிழக்கில் பிகார், வங்காளம் வரை ஆண்டார்.
17 ஆண்டு கால சூர் வம்ச ஆட்சியில், குறிப்பக சேர் சா சூரி ஆட்சியில், இந்தியத் துணை கண்டத்தில் வங்காளம் முதல் பஞ்சாப் முடிய நெடுஞ்சாலைகள் அமைத்தன் மூலம் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி வகுக்கப்பட்ட்து. வெள்ளி நாணயங்கள் வெளியிட்டனர். வேளாண் நிலங்களை அளந்து ஆவணப்படுத்தப்பட்டது, நீர் பாசான வசதிகள், நிலவரி வசூலித்தல், கிராம நிர்வாகம் போன்றவைகளில் நிர்வாகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. குடிமக்களுக்கும், அரசிற்கிடையே நல்லுறவுக்கு வழிவகுக்கப்பட்டது.
ஹெமு என்ற இராஜபுத்திர போர்ப்படைத்தலைவர், சூர் வம்ச ஆட்சியைக் கைப்பற்றி ஒரு மாத காலம் ஆண்டார்.
பின்னர் முகலாய வம்ச அக்பர் காலத்தில், பைரம் கான் லோடியால் 1556இல் சூரி வம்சம் வீழ்ச்சி கண்டது.
சூர் வம்ச ஆட்சியாளர்கள்
சூர் வம்சத்தின் ஆட்சியாளர்கள்;
பெயர் | படம் | ஆட்சி துவக்கம் | ஆட்சி முடிவு |
---|---|---|---|
சேர் சா சூரி | மே 17, 1540[8] | மே 22, 1545[8] | |
இசுலாம் ஷா சூரி | மே 26, 1545[9] | நவம்பர் 22, 1554[9] | |
பிரௌஸ் ஷா சூரி | 1554[10] | ||
முகமது அடில் ஷா | 1554[10] | 1555[11] | |
இப்ராகிம் ஷா சூரி | 1555[11] | ||
சிக்கந்தர் ஷா சூரி | 1555[11] | சூன் 22, 1555[11] | |
அடில் ஷா சூரி | சூன் 22, 1555[11] | 1556[11] |