சி. வி. கே. சிவஞானம்
சி. வேலுப்பிள்ளை கந்தையா சிவஞானம் (C. Velupillai Kandaiah Sivagnanam) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும் ஆவார்.
சி. வி. கே. சிவஞானம் C. V. K. Sivagnanam | |
---|---|
1வது வட மாகாண சபையின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் அக்டோபர் 2013 | |
யாழ்ப்பாண மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 அக்டோபர் 2013 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
தொழில் | அரசுப் பணியாளர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
அரசியலில்
சிவஞானம் யாழ்ப்பாண மாநகரசபையின் ஆணையாளராகப் பணியாற்றி இளைப்பாறிய பின்னர் 2004, மற்றும் 2010 நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டார். ஆனாலும் இரு தடவைகளும் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.[1][2]
சிவஞானம் 2013 வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு 26,747 விருப்பு வாக்குகள் பெற்று 1வது வட மாகாண சபை உறுப்பினரானார்.[3][4] இவர் 2013 அக்டோபர் 11 ஆம் நாள் மாகாண சபை உறுப்பினராக முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.[5][6] அதே நாளில் இவர் 1வது வட மாகாண சபையின் தலைவராக (தவிசாளர்) முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டார்.