சிறு மலர் கல்லூரி, குருவாயூர்
சிறு மலர் கல்லூரி, குருவாயூர் என்பது இந்தியாவின் குருவாயூரில் உள்ள ஒரு பெண்கள் கத்தோலிக்க கல்லூரியாகும். [1] கோழிக்கோடு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள[2] இக்கல்லூரியின் நிர்வாகம் பிரான்சிஸ்கன் திருச்சபையின் திருச்சூர் அசிசி மாகாணத்தின் கீழ் நடைபெறுகிறது.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b9/Little_Flower_College.jpg/220px-Little_Flower_College.jpg)
வகை | சிறுபான்மையினரின் அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1955 |
சார்பு | கோழிக்கோடு பல்கலைக்கழகம் |
தரநிர்ணயம் | தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை |
முதல்வர் | அருட்திரு. முனைவர் எம்.ஏ.வல்சா |
பணிப்பாளர் | அருட்திரு.லிட்டில் மேரி |
அமைவிடம் | புதன்பள்ளி அஞ்சல் , , , 680103 10°36′20″N 76°02′05″E / 10.605546°N 76.0347968°E |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையதளம் | கல்லூரி இணையதளம் |
2017 ஆம் ஆண்டில், தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (NIRF) தரவரிசையில் இக்கல்லூரி இந்தியாவில் 49 வது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.[3]
வரலாறு
1955 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல்[4] இக்கல்லூரி இயங்கிவருகிறது.திருச்சூர் ரோமன் கத்தோலிக்க பேராயரின் மத அதிகாரத்தின் கீழ் உள்ள பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையால் நிறுவப்பட்ட[5] இந்த கல்லூரி முதன்முதலில் சென்னைப் பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டிருந்தது. பின்னர் 1957 ஆம் ஆண்டில் கேரளப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது,
1968 ஆம் ஆண்டில் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் இணைக்கப்பட்ட இந்தக் கல்லூரி 1957 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இரண்டாம் நிலைக் கல்லூரியாகச் செயல்படத் தொடங்கியது. கணிதத்தில் இளங்கலை அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் ஆகியவற்றை அதன் கல்விப்பிரிவுகளில் சேர்த்த பிறகு, இக்கல்லூரி முதல் தர கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது இக்கல்லூரி மலப்புரம், பாலகாடு மற்றும் திருச்சூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் உள்ள கல்வி நிருவனங்களில் முதன்மை கல்வி மையமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளதோடு, சுமார் 2000 மாணவர்கள் கொண்ட கல்லூரியாக, 2 தொழிற்கல்வி படிப்புகள் மற்றும் 9 முதுகலை திட்டங்கள் மற்றும் ஒரு சமூக கல்லூரி உட்பட 17 இளங்கலைப் பாடங்களை பயிற்றுவிக்கிறது.