சார்ல்ஸ் நிர்மலநாதன்
இருதயநாதன் சார்ல்சு நிர்மலநாதன் (Iruthayanathan Charles Nirmalanathan; பிறப்பு: 24 நவம்பர் 1975) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]
சார்ல்ஸ் நிர்மலநாதன் | |
---|---|
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஆகத்து 2020 | |
தொகுதி | வன்னி மாவட்டம் |
பதவியில் ஆகத்து 2015 – மார்ச் 2020 | |
தொகுதி | வன்னி மாவட்டம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இருதயநாதன் சார்ல்ஸ் நிர்மலநாதன் 24 நவம்பர் 1975 |
குடியுரிமை | இலங்கையர் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
வாழிடம்(s) | எழுதூர், மன்னார் |
வாழ்க்கைக் குறிப்பு
நிர்மலநாதன் 1975 நவம்பர் 24 இல் பிறந்தார்.[1] இவர் பருத்தித்துறை, வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார்.[2] இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினராவார்.[3][4]
அரசியலில்
நிர்மலநாதன் 2013 வடமாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டார். இவர் மாவட்டத்தில் விருப்பு வாக்குகளில் நான்காவதாக வந்ததால் வட மாகாண சபைக்குத் தெரிவாகவில்லை.[5][6] பின்னர் அவர் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் ததேகூ வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு வன்னி மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் (34,620) பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[7][8] 2020 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[9][10][11]
தேர்தல் வரலாறு
தேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | முடிவு | ||
---|---|---|---|---|---|---|---|
2013 வடமாகாணசபை[6] | மன்னார் மாவட்டம் | இலங்கைத் தமிழரசுக் கட்சி | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | 12,153 | தெரிவு செய்யப்படவில்லை | ||
2015 நாடாளுமன்றம்[12] | வன்னி மாவட்டம் | இலங்கைத் தமிழரசுக் கட்சி | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | 34,620 | தெரிவு | ||
2020 நாடாளுமன்றம்[13] | வன்னி மாவட்டம் | இலங்கைத் தமிழரசுக் கட்சி | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | 25,668 | தெரிவு |