சரத் பொன்சேகா
ஜெனரல் கர்டியெவா சரத் சந்திரலால் பொன்சேகா (பிறப்பு: 18 திசம்பர் 1950) 2005 டிசம்பர் 6 முதல் இலங்கை இராணுவத்தின் கட்டளைத் தளபதியாக பதவி வகித்து வந்தவர். இவர் இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம் முதலே இலங்கை இராணுவத்தில் பணியாற்றி வந்திருக்கின்றார்.
சரத் பொன்சேகா Sarath Fonseka | |
---|---|
![]() | |
பிரதேச அபிவிருத்தி அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 25 பெப்ரவரி 2016 | |
இலங்கை நாடாளுமன்றத் தேசியப் பட்டியல் உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 09 பெப்ரவரி 2016 | |
முன்னையவர் | எம். கே. ஏ. டி. எஸ். குணவர்தனா |
கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 22 ஏப்ரல் 2010 – 7 அக்டோபர் 2010 | |
சனநாயகக் கட்சித் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1 ஏப்ரல் 2013 | |
பாதுகாப்பு அதிகாரிகளின் தலைவர் | |
பதவியில் 15 சூலை 2009 – 30 நவம்பர் 2009 | |
இராணுவத் தளபதி | |
பதவியில் 6 டிசம்பர் 2005 – 15 சூலை 2009 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கார்திகேவா சரத் சந்திரலால் பொன்சேகா 18 திசம்பர் 1950 அம்பலாங்கொடை, இலங்கை |
அரசியல் கட்சி | சனநாயகக் கடி (2013 - இன்று) சனநாயகத் தேசியக் கூட்டணி (2010 - 2013) புதிய சனநாயக முன்னணி (2009–2010) |
துணைவர் | அனோமா பொன்சேகா |
பிள்ளைகள் | அபர்ணா, அப்சரா |
முன்னாள் கல்லூரி | மடவலலந்தை மகா வித்தியாலயம், அம்பாறை, தர்மசோகா கல்லூரி, அம்பலாங்கொடை ஆனந்தா கல்லூரி |
வேலை | அரசியல்வாதி இராணுவ அதிகாரி |
Military service | |
பற்றிணைப்பு | இலங்கை |
கிளை/சேவை | இலங்கைத் தரைப்படை |
சேவை ஆண்டுகள் | 1970–2009, 2015–இன்று |
தரம் | பீல்டு மார்சல் |
அலகு | இலங்கை சிங்கப் படை |
கட்டளை | இராணுவத் தளபதி |
போர்கள்/யுத்தங்கள் | ஈழப் போர், 1987-89 ஜேவிபி புரட்சி |
விருதுகள் | |
இவர் தமிழ் மக்கள் 20000க்கும் மேற்பட்டோரை வன்னி போர்முனை பகுதியில் படுகொலை செய்வதற்குக் காரணமான முக்கிய சூத்திரதாரியாக சர்வதேச மனிதாபிமான ஆர்வலர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். நவம்பர் 16, 2009 அன்று தமது பதவியிலிருந்து விலகி இலங்கையின் அடுத்த அதிபர் தேர்தலில், அப்போதைய அதிபர் மகிந்த ராஜ்பக்சேவிற்கு எதிராக போட்டியிட முடிவெடுத்தார்.[1][2]
அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பொன்சேகா, இலங்கை அரசினால் இராணுவப் புரட்சிக்கு திட்டமிட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார். இதன் பின்னர் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் பொன்சேகா குற்றவாளியாக அடையாளம் காட்டப்பட்டார்[3].
மீண்டும் பதவியில்
மைத்திரிபால சிறிசேன இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றபின், சரத் பொன்சேகா மீண்டும் இலங்கை இராணுவத்தின் தலைமைப் படைத்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.[4]. 22 மார்ச் 2015இல் இலங்கை இராணுவத்தின் முதல் பீல்டு மார்சல் எனும் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது என அதிகாரப் பூர்வமற்ற செய்திகள் கூறுகிறது.[5][6]
ஆதாரங்கள்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/24/Wikinews-logo.svg/45px-Wikinews-logo.svg.png)
தொடர்பான செய்திகள் உள்ளது.