கே. சோபா
கே. சோபா (Shobha Karandlaje), கர்நாடக அரசியல்வாதி. இவர் 1966-ஆம் ஆண்டின் அக்டோபர் 23-ஆம் நாளில் பிறந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், உடுப்பி-சிக்கமகளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[2]இவர் மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் நடப்பு இணை அமைச்சராக உள்ளார்.[3] மார்ச் 2024-இல், சோபா 2024 பொதுத் தேர்தலில் பெங்களூரு வடக்கு தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.[4]
கே. சோபா | |
---|---|
2021-இல் சோபா | |
வேளாண்மை விவசாயி நலத்துறை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 சூலை 2021 Serving with கைலாஷ் சௌத்ரி | |
குடியரசுத் தலைவர் | ராம் நாத் கோவிந்த் |
பிரதமர் | நரேந்திர மோதி |
அமைச்சர் | நரேந்திர சிங் தோமர் |
முன்னையவர் | பர்சோத்தம் ரூபாலா |
எரி சத்தி அமைச்சர் கர்நாடக அரசு | |
பதவியில் 22 செப்டம்பர் 2010 – 23 சனவரி 2013 | |
கர்நாடக முதலமைச்சர் | பி. எஸ். எடியூரப்பா டி. வி. சதானந்த கௌடா செகதீசு செட்டர் |
முன்னையவர் | கே. எஸ். ஈஸ்வரப்பா |
பின்னவர் | டி. கே. சிவகுமார் |
உணவு குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் கர்நாடக அரசு | |
பதவியில் 12 திசம்பர் 2010 – 12 சூலை 2012 | |
கர்நாடக முதலமைச்சர் | பி. எஸ். எடியூரப்பா டி. வி. சதானந்த கௌடா |
முன்னையவர் | vவி. சோமண்ணா |
பின்னவர் | டி. என். ஜீவாராஜ் |
கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கர்நாடக அரசு | |
பதவியில் 30 மே 2008 – 9 நவம்பர் 2009 | |
கர்நாடக முதலமைச்சர் | பி. எஸ். எடியூரப்பா |
முன்னையவர் | sஇ. எம். உதாசி |
பின்னவர் | செகதீசு செட்டர் |
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை (இந்தியா) | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2014 | |
முன்னையவர் | கெ. ஜெயப்பிரகாசு ஹெக்டே |
தொகுதி | உடுப்பி-சிக்கமகளூர் |
உறுப்பினர் கர்நாடக சட்டப் பேரவை | |
பதவியில் 2008–2013 | |
முன்னையவர் | தற்பொழுது இல்லை |
பின்னவர் | எசு. டி. சோமாசேகர் |
தொகுதி | யசவந்தபுரா சட்டமன்றத் தொகுதி |
உறுப்பினர் கர்நாடக சட்டப் பேரவை | |
பதவியில் 15 சூன் 2004 – 27 மே 2008 | |
பின்னவர் | எசு. கைலாசு |
தொகுதி | தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 அக்டோபர் 1966 புத்தூர், மைசூர் மாநிலம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (2012 வரை; 2014–முதல்) |
பிற அரசியல் தொடர்புகள் | கருநாடக சனதா கட்சி (2012-2014) |
கல்வி | முதுகலை (சமூகவியல்), முதுநிலை சமூகப்பணி[1] |
முன்னாள் கல்லூரி | மங்களூர் பல்கலைக்கழகம் |
புனைப்பெயர் | சோபாக்கா |
மூலம்: [1] |
இளமை
கடலோர கர்நாடகாவில் உள்ள புத்தூரைச் சேர்ந்தவர்,[5] ஷோபா, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் முழுநேரப் பணியாளர்களில் ஒருவர். ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் சிறுவயதிலேயே இவர் இணைந்தார்.[6] சோபா அரசியலில் நுழைய முடிவு செய்தபோது, ஆர். எஸ். எஸ். இவருக்கு ஆரம்ப உந்துதலைக் கொடுத்தது.[7]
சோபா மைசூரில் உள்ள திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலை பட்டமும் சமூகப் பணி முதுகலைப் பட்டத்தினை மங்களூர் பல்கலைக்கழகத்தின் சமூகப் பணி ரோஷ்னி நிலயா பள்ளியில் முடித்தார்.
அரசியல்
2004-இல் சோபா சட்ட மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். மே 2008இல் பெங்களூரு யசுவந்த்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பி. எஸ். எடியூரப்பா அரசாங்கத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக நியமிக்கப்பட்ட இவர்,[8] இவரின் செயல்பாடுகளுக்காகப் பாராட்டப்பட்டார்.[9] மேலும் ஒரு நல்ல நிர்வாகியாக அறியப்பட்டார். இவர் அரசியல் நெருக்கடி காரணமாக 2009-இல் பதவி விலக நேரிட்டது. ஆனால் மீண்டும் 2010-இல் பதவியில் அமர்த்தப்பட்டார். இம்முறை இவர் எரிசக்தி துறை அமைச்சரானார். இவர் ஜெகதீஷ் ஷெட்டர் அமைச்சகத்தில் மின்துறை அமைச்சராக இருந்தார்.[10] மேலும் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறையின் கூடுதல் பொறுப்பையும் இவர் கவனித்தார்.
சோபா பாஜகவிலிருந்து விலகி 2012ஆம் ஆண்டு கர்நாடக முன்னாள் முதல்வர் பி. எஸ். எடியூரப்பாவால் உருவாக்கப்பட்ட கருநாடக சனதா கட்சியில் சேர்ந்தார்.[11] சோபா கருநாடக சனதா கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.[12][13] இவர் 2013 சட்டமன்றத் தேர்தலில் ராஜாஜி நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பெற்றார்.[14] சனவரி 2014-இல், இவரது கட்சி பாஜகவுடன் இணைந்தது.
பின்னர் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் உடுப்பி சிக்மகளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 1.81 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக 7,18,916 வாக்குகளைப் பெற்று,[15] உடுப்பி சிக்மகளூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆனார்.[16]