கிரேசி மோகன்
கிரேசி மோகன் (16 அக்டோபர் 1952 - 10 சூன் 2019)[3] தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றியவர். இது தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றியவர். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்தார்.[4] அடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றினார். முழுக்கவே நகைச்சுவையாக எழுதுவதில் பெயர் பெற்றவர்.
"கிரேசி" மோகன் | |
---|---|
சாக்லேட் கிருஷ்ணா என்னும் நாடகத்தில் கிருஷ்ணர் வேட்டத்தில் கிரேசி மோகன் | |
பிறப்பு | மோகன் ரங்காச்சாரி[1] 16 அக்டோபர் 1952 |
இறப்பு | சூன் 10, 2019 | (அகவை 66)
பணி | நகைச்சுவை நடிகர் நாடகாசிரியர் |
வாழ்க்கைத் துணை | நளினி[2] |
பிள்ளைகள் | அஜய், அர்ஜுன் [2] |
உறவினர்கள் | மாது பாலாஜி (சகோதரர்) |
இவரது சகோதரர் மாது பாலாஜி, கிரேசி மோகனின் நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிப்பவர்.
ஆரம்ப காலம்
எஸ். வி. சேகர் அவர்களின் நாடகமான "கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்" என்ற நாடகத்தின் மூலம் 1976இல் அறிமுகமானார் மோகன். அந்த நாடகம் பெறும் வரவேற்பைப் பெற்றதால் 'கிரேசி' என்ற அடைமொழியுடன் 'கிரேசி' மோகன் என்று அழைக்கப்பட்டார்.[5][6][2]
பணியாற்றிய திரைப்படங்கள்
- பொய்க்கால் குதிரை (1983)
- கதாநாயகன் (1988)
- அபூர்வ சகோதரர்கள் (1989)
- மைக்கேல் மதன காமராஜன் (1990)
- உன்னைச் சொல்லி குற்றமில்லை (1990)
- இந்திரன் சந்திரன் (1990)
- சின்ன மாப்ளே (1993)
- மகளிர் மட்டும் (1994)
- வியட்நாம் காலனி (1994)
- சின்ன வாத்தியார் (1995)
- எங்கிருந்தோ வந்தான் (1995)
- சதி லீலாவதி (1995)
- அவ்வை சண்முகி (1996)
- மிஸ்டர் ரோமியோ (1996)
- ஆஹா (1997)
- அருணாச்சலம் (1997)
- ரட்சகன் (1997)
- சிஷ்யா (1997)
- தேடினேன் வந்தது (1997)
- காதலா காதலா (1998)
- கண்ணோடு காண்பதெல்லாம் (1999)
- என்றென்றும் காதல் (1999)
- பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)
- தெனாலி (2000)
- லிட்டில் ஜான் (2001)
- பஞ்சதந்திரம் (2002)
- பம்மல் கே. சம்பந்தம் (2002)
- வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் (2004)
- இதயத்திருடன் (2006)
- ஜெர்ரி (2006)
- கொல கொலயா முந்திரிக்கா (2010)
- நான் ஈ (2012)
மறைவு
கிரேசி மோகன் மாரடைப்பால் 10 சூன் 2019 அன்று பிற்பகல் 2 மணி அளவில் மருத்துவமனையில் மறைந்தார்.[7]