கி. துரைராஜசிங்கம்
கிருஷ்ணபிள்ளை துரைராஜசிங்கம் ('Krishnapillai Thurairajasingam, பிறப்பு: 28 சூலை 1956)[1] இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், மாகாண அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
கி. துரைராஜசிங்கம் | |
---|---|
கிழக்கு மாகாண சபை விவசாய கால்நடை கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 மார்ச் 2015 | |
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1994–2000 | |
மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2012 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 28 சூலை 1956 |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
வாழிடம் | மட்டக்களப்பு |
தொழில் | வழக்கறிஞர் |
அரசியலில்
வழக்கறிஞராகப் பணி புரியும் துரைராஜசிங்கம்[2][3] 1994 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4] பின்னர் 2012 மாகாண சபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் பீட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.[5][6][7][8]
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மாவை சேனாதிராஜா அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து 2014 செப்டம்பரில் கட்சியின் பொதுச் செயலாளராக துரைராஜசிங்கம் நியமிக்கப்பட்டார்.[9][10] 2015 அரசுத்தலைவர் தேர்தலை அடுத்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சிறுபான்மைக் கட்சியான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்ததை அடுத்து, அங்கு புதிய அர்சு பதவியேற்றது.[11][12][13] துரைராஜசிங்கம் கிழக்கு மாகாணத்தின் விவசாய கால்நடை கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ முன்னிலையில் 2015 மார்ச் 3 இல் பதவியேற்றார்.[14][15]