கிரண்ஜித் அலுவாலியா

கிரண்ஜித் அலுவாலியா (Kiranjit Ahluwalia பிறப்பு 1955) ஓர் இந்திய பெண் ஆவார், இவர் தனது தவறான கணவனை 1989 இல் இங்கிலாந்தில் எரித்து கொன்றதன் மூலம் பரவலான சர்வதேச கவனம் பெற்றார். பத்து வருட உடல், உளவியல் மற்றும் பாலியல் முறைகேடுகளின் விளைவாக இந்தச் சம்பவம் நடந்தது எனக் கூறினார். [1] ஆரம்பத்தில் கொலைக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக்குப் பிறகு, அலுவாலியாவின் தண்டனை போதிய ஆலோசனையின் அடிப்படையில் ரத்து செய்யப்பட்டது. [2]

ப்ரோவோக்ட் (2006) திரைப்படம் அலுவாலியாவின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு கற்பனைக் கதையாகும்.

பின்னணி

1977 ஆம் ஆண்டில், தனது 21 ஆம் வயதில், கிரண்ஜித் தனது சகோதரியைச் சந்திக்க கனடாவுக்குச் செல்வதற்காக பஞ்சாபில் உள்ள சக் கலால் வீட்டை விட்டு வெளியேறினார். இதைத் தொடர்ந்து 21 ஜூலை 1979 அன்று, இவர் இங்கிலாந்துக்குச் சென்றார், அங்கு இவர் ஒரு முறை மட்டுமே சந்தித்த தனது கணவர் தீபக்கை மணந்தார். உடல் வன்முறை, உணவு பற்றாக்குறை மற்றும் திருமண கற்பழிப்பு உட்பட பத்து வருடங்களாக குடும்ப வன்முறையால் அவதிப்பட்டு வந்ததாக இவர் கூறினார். [1] [3]

கிரண்ஜித் இவளுடைய குடும்பத்தை உதவிக்காக எதிர்பார்த்தபோது, நீ கணவனுடன் இருப்பது தான் குடும்ப கவுரவம் என்று கூறி இவரை கண்டித்தனர். இறுதியில் இவள் வீட்டை விட்டு ஓட முயன்றாள், ஆனால் இவள் கணவனால் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் கொண்டு வரப்பட்ட்டார். திருமணத்தின் போது, கிரஞ்சித்துக்கு இரண்டு மகன்கள் இருந்தனர், இவர் அடிக்கடி இவள் அனுபவித்த வன்முறைக்கு இவர்கள் சாட்சியாக இருந்ததாகக் கூறினார். [3] இருப்பினும், விசாரணைக்கு முன்னர் நீதிமன்றத்திலோ அல்லது காவல் துறை நேர்காணல்களிலோ அந்த சிறுவர்கள் அதற்கான ஆதாரத்தினைக் கொடுக்கவில்லை.

1989 ஆம் ஆ ண்டில் ஒரு நாள் மாலை, கிரண்ஜித்தை இவரது கணவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் இவர் தனது கணுக்கால்களை உடைத்து, சூடான இரும்பினால் முகத்தை எரிக்க முயன்றதாக குற்றம் சாட்டினார். அன்று இரவு, கணவர் தூங்கிக்கொண்டிருந்தபோது, கிரண்ஜித் சிறிது பெட்ரோல் மற்றும் காஸ்டிக் சோடா கலவையை எடுத்து வந்து அதை கலந்து அலுமியப் பொடிக்கட்டி ஒன்றினை உருவாக்கினார். அதை படுக்கையின் மேல் ஊற்றி விட்டு தன் மூன்று வயது மகனுடன் தோட்டத்திற்கு ஓடினார். [4]

பின்னர் ஒரு நேர்காணலில்: "அது எவ்வளவு வலிக்கிறது என்பதை இவருக்குக் காட்ட முடிவு செய்தேன். சில சமயங்களில் நான் தப்பி ஓட முயன்றேன், ஆனால் அவர் என்னைப் பிடித்து இன்னும் கடுமையாக அடிப்பார். நான் அவர் பின்னால் ஓட முடியாமல் இவரது கால்களை எரிக்க முடிவு செய்தேன். " [3] "இவன் எனக்கு கொடுத்த வலியைப் போக்க, இவன் கொடுத்ததைப் போன்ற ஒரு வடுவை நான் இவனுக்குக் கொடுக்க விரும்பினேன்" அதற்காகத் தான் இவ்வாறு செய்தேன் எனக் கூறினார்.

தீபக்கின் உடலில் 40% க்கும் அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டன மற்றும் 10 நாட்களுக்குப் பிறகு கடுமையான தீக்காயங்கள் மற்றும் இரத்த நச்சுப்பாட்டு சிக்கல்களால் மருத்துவமனையில் இறந்தார். பின்னர் கிரண்ஜித் கைது செய்யப்பட்டு இறுதியில் கொலைக் குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டார். [5]

சான்றுகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்