கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Gangaser Ponnambalam, பிறப்பு: சனவரி 16, 1974), இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும்,[1] வழக்கறிஞரும் ஆவார். இவர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரும் ஆவார்.[2]

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
2014 இல் பொன்னம்பலம்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஆகத்து 2020
தொகுதியாழ்ப்பாண மாவட்டம்
பதவியில்
2004–2010
தொகுதியாழ்ப்பாண மாவட்டம்
பதவியில்
2001–2004
தொகுதியாழ்ப்பாண மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கஜேந்திரகுமார் காங்கேசர் பொன்னம்பலம்

16 சனவரி 1974 (1974-01-16) (அகவை 50)
அரசியல் கட்சிஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
முன்னாள் கல்லூரிஇலண்டன் பல்கலைக்கழகம்
தொழில்வழக்கறிஞர்

வாழ்க்கைக் குறிப்பு

கஜேந்திரகுமார் யாழ்ப்பாணத்தில் பிரபலமான குடும்பம் ஒன்றில் பிறந்தவர். முன்னாள் அரசியல்வாதி குமார் பொன்னம்பலத்தின் மகனும், ஜி. ஜி. பொன்னம்பலத்தின் பெயரனும் ஆவார்.[3]

கஜேந்திரகுமார் கொழும்பு ரோயல் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு பன்னாட்டுப் பாடசாலையிலும் கல்வி கற்றார். பின்னர் இலண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று 1995 ஆம் ஆண்டில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன் பின்னர் "லிங்கன் இன்" கழகத்தில் படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்று இலங்கை திரும்பினார். இலங்கையில் வழக்கறிஞராகப் பணியாற்றி 1999 ஆம் ஆண்டில் இலங்கை வழக்கறிஞர் கழகத்தில் சேர்ந்தார்.

அரசியலில்

கஜேந்திரகுமார் 2000 சனவரி 5 இல் அவரது தந்தை குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அரசியலில் இறங்கினார்.[3] 2001 அக்டோபர் 20 இல், தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியன இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற அரசியல் கூட்டணியை ஆரம்பித்தன.[4][5] 2001 நாடாளுமன்றத் தேர்தலில் பொன்னம்பலம் இக்கூட்டமைப்பு சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு முதல்தடவையாக நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பைப் பெற்றார்.[6] 2004 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.[7]

2010 மார்ச்சில், இவர் செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகிய ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (ததேமமு) என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர்.[8][9] பொன்னம்பலம் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் ததேமமு வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டார். இத்தேர்தலில் இவரது அமைப்பைச் சேர்ந்த எவரும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[10][11] 2011 பெப்ரவரியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12] 2015 நாடாளுமன்றத் தேர்தலில் இவரது கட்சியைச் சேர்ந்த எவரும் வெற்றி பெறவில்லை.[13][14] 2020 நாடாளுமன்றத் தேர்தலில் பொன்னம்பலம் மீண்டும் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவானார்.[15][16][17]

தேர்தல் வரலாறு

கயேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தேர்தல் வரலாறு
தேர்தல்தொகுதிகட்சிகூட்டணிவாக்குகள்முடிவு
2001 நாடாளுமன்றம்[6]யாழ்ப்பாண மாவட்டம்அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு29,641தெரிவு
2004 நாடாளுமன்றம்[7]யாழ்ப்பாண மாவட்டம்அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு60,770தெரிவு
2010 நாடாளுமன்றம்யாழ்ப்பாண மாவட்டம்அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதெரிவு செய்யப்படவில்லை
2015 நாடாளுமன்றம்யாழ்ப்பாண மாவட்டம்அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதெரிவு செய்யப்படவில்லை
2020 நாடாளுமன்றம்[18]யாழ்ப்பாண மாவட்டம்அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி31,658தெரிவு

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்