ஊணூர்
ஊணூர் என்னும் சங்ககால ஊர் இக்காலத்துக் கோடியக்கரைப் பகுதியாகும்.[சான்று தேவை] இதன் கடற்கரைப் பகுதி மருங்கூர்ப் பட்டினம். உள்ளூர்ப் பகுதி நெல் விளையும் நிலம். நெல்(நெல்லரிசி) மக்களுக்கு ஊண்(உணவு) [1]. எனவே இந்த ஊரை ஊணூர் என்றது காரணப்பெயர். [2] அன்றில் பறவைகள் மிகுதியாக வாழ்ந்த ஊர் இது.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/23/Black-headed_Ibis_%28Threskiornis_melanocephalus%29-_juvenile_asking_for_food_from_adult_W_IMG_3343.jpg/300px-Black-headed_Ibis_%28Threskiornis_melanocephalus%29-_juvenile_asking_for_food_from_adult_W_IMG_3343.jpg)
சங்கப் பாடல்களில் ஊணூர் தகவல்கள்
- கடலலை மோதிக்கொண்டிருக்கும் ஊர் ஊணூர்.
- இது பாதுகாக்கப்பட்ட நெற்களஞ்சியமாக விளங்கியது.
- அன்றில் பறவைகளின் புகலிடமாகவும் விளங்கியது. நோலா-இரும்புள் [3] எனப் போற்றப்படும் அன்றில் பறவைகள் கூடி மகிழும் புகலிடம் இந்த ஊணூர்.
- இங்குக் கடலில் வலை போட்டால் இறால் மீன் மிகுதியாகப் பெறலாம்.[4]
- ஊணூர் அரசன் வாய்மொழித் தழும்பன். இவன் யாழ்ப்பாணர்களின் தலைவன். ஊணூரில் பிச்சை எடுக்கும் யானைகள் வந்துபோகும்.[5]
- ஊணூரைத் தாண்டிச் சென்றால் மருங்கூர்ப் பட்டினம் என்னும் துறைமுகத்தை அடையலாம்.
- ஊணூர் மன்னன் தழும்பனைத் தூங்கல் (தூங்கல் ஓரியார்) என்னும் புலவர் பாடியுள்ளார். இந்தப் பாடல் கிட்டியுள்ள சங்கநூல் தொகுப்பில் இல்லை.[6]
- இவ்வூர் மக்கள் நெல் அறுக்கும் அரிவாளால் மீனைச் சீவித் தூய்மை செய்வர்.[7]
- இந்த ஊணூர் தழும்பன் ஆட்சியில் படை எடுப்புக்கு உள்ளானது. இதற்கு காரணம் மகள் மறுக்கும் மாண்பு என்பது புறப்பாடலால் கிடைக்கும் செய்தி. இந்த மகள் மறுக்கும் மாண்பால் இந்த பெண்ணை தேடிய அரசனின் தேர்படையும் யானைப்படையும் இம்மண்ணை பாழ்படுத்தியதாம்.[8]
அடிக்குறிப்பு
ஒப்பிட்டுக் காண்க
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்