இலங்கை மீதான ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலக விசாரணை

2014 மார்ச் மாதம் செனீவாவில் உள்ள ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 'இலங்கையில் நடைபெற்ற போரின் போது நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் முறைகேடுகள், அவை தொடர்பான குற்றச்செயல்கள் குறித்து, ஒரு முழுமையான புலனாய்வை மேற்கொள்ளுமாறும்' ஐநா மனித உரிமை ஆணையருக்கு ஆணையிட்டது. இந்த விசாரணையின் இடைக்கால அறிக்கை 2014 செப்டம்பரிலும் இறுதி அறிக்கை மார்ச் 2015 இலும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டது. இந்த ஆணைகளுக்கு ஏற்ப இலங்கை மீதான ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலக விசாரணை (OHCHR Investigation on Sri Lanka - OISL) முன்னெடுக்கப்பட்டு வருகிறது.[1]

விசாரணைக் குழு

இந்த விசாரணையில் பின்லாந்து நாட்டின் முன்னாள் அதிபரும் நோபல் பரிசு பெற்றவருமான மார்ட்டி அட்டிசாரி, கம்போடிய இனப்படுகொலை நீதிமன்ற நீதிபதியும் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவருமான சில்வியா காட்ரைட், பாகிஸ்தான் நாட்டின் மனித உரிமை வல்லுநர் அஸ்மா ஜகாங்கிர் ஆகியோர் சிறப்பு வல்லுனர்களாக செயற்படுகின்றார்கள். மேலும், சட்டத்துக்கு புறம்பான அரசப்படுகொலைகள் (Extrajudicial executions), காணாமல் போகச்செய்தல் (Disappearances), உள்நாட்டு அகதிகள் (internally displaced persons), சட்டவிரோத காவல் (Internally displaced persons), பெண்களுக்கு எதிரான வன்முறைகள் (Violence against women), சித்தரவதை (Torture) ஆகியனவற்றுக்கான சிறப்பு ஐநா வல்லுநர்கள்களின் உள்ளீடும் பெறப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்