இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2015

2015 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் (2015 Sri Lankan parliamentary election) 2015 ஆகத்து 17 இல் நடைபெற்றது. 10 மாதங்களுக்கு முன்கூட்டியே நடைபெற்ற இத்தேர்தலில் இலங்கையின் 15வது நாடாளுமன்றத்திற்கு 225 பேர் தெரிவாகவுள்ளனர்.[3][4][5] 2015 சூன் 26 அன்று அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன 14வது நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.[6] தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் 2015 சூலை 6 முதல் 13 வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன.[7][8][9][10]

இலங்கையின் 15வது
நாடாளுமன்றத் தேர்தல்

← 201017 ஆகத்து 20152020 →

இலங்கை நாடாளுமன்றத்துக்கான அனைத்து 225 தொகுதிகளுக்கும்
வாக்களித்தோர்11,166,975 (77.66%)
 First partySecond party
 
தலைவர்ரணில் விக்கிரமசிங்கமைத்திரிபால சிறிசேன
கட்சிஐக்கிய தேசியக் கட்சிஇலங்கை சுதந்திரக் கட்சி
கூட்டணிநல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
தலைவரான
ஆண்டு
19942015
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
கொழும்பு மாவட்டம்இல்லை
முந்தைய
தேர்தல்
60[1]144
வென்ற
தொகுதிகள்
10695
மாற்றம்4649
மொத்த வாக்குகள்5,098,9164,732,664
விழுக்காடு45.66%42.38%
மாற்றம்16.32%17.95%

 Third partyFourth party
 
தலைவர்இரா. சம்பந்தன்அனுர குமார திசாநாயக்க
கட்சிஇலங்கை தமிழரசுக் கட்சிமக்கள் விடுதலை முன்னணி
கூட்டணிதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தலைவரான
ஆண்டு
20012014
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
திருகோணமலை மாவட்டம்கொழும்பு மாவட்டம்
முந்தைய
தேர்தல்
14[2]4 இடங்கள், 5.49%
வென்ற
தொகுதிகள்
166
மாற்றம்22
மொத்த வாக்குகள்515,963543,944
விழுக்காடு4.62%4.87%
மாற்றம்1.72%0.62%

நஐதேமுஐமசுகூததேகூ
வெற்றி பெற்ற தேர்தல் மாவட்டங்கள்

முந்தைய பிரதமர்

ரணில் விக்கிரமசிங்க
ஐக்கிய தேசியக் கட்சி

பிரதமர்-தெரிவு

ரணில் விக்கிரமசிங்க
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி

ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி[1] 106 இடங்களைக் கைப்பற்றியது. ஆனாலும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியது.[11] ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 95 இடங்களையும்,[11] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 இடங்களையும் கைப்பற்றின.[11] மீதியான எட்டு இடங்களையும் மக்கள் விடுதலை முன்னணி (6), சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு[12] (1) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (1) ஆகியன கைப்பற்றின.

பின்னணி

கடைசி நாடாளுமன்றத் தேர்தல் 2010 ஏப்ரலில் நடைபெற்றது. அப்போது ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ) 2009 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளைப் போரில் வெற்றி கொண்ட பின்னர் இத்தேர்தலில் 144 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைத்தது.[13] 2010 செப்டம்பரில் சில சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவுடன் அரசமைப்புச் சட்டத்தின் 18வது திருத்தத்தை நிறைவேற்றியது. அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் நிறைவேற்றதிகாரங்களை அதிகரிக்கவும் அரசுத்தலைவருக்கான அதிகபட்சம் இரண்டு தவணைக்காலங்களை நீக்கவும் இத்திருத்தம் வழிவகுத்தது.[14] அத்துடன் தலைமை நீதிபதியை நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் பதவியில் இருந்து அகற்றியது.[15]

அரசுத்தலைவர் ராசபக்ச தனது பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்கூட்டியே 2014 நவம்பரில் அரசுத்தலைவர் தேர்தலை நடத்த அறிவித்தார்.[16] ராசபக்சவின் அமைச்சரவையில் மூத்த உறுப்பினராக இருந்த மைத்திரிபால சிறிசேன எவரும் எதிர்பார்க்காத நிலையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.[17] 2015 சனவரியில் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் சிறிசேன ராசபக்சவை வென்று புதிய அரசுத் தலைவர் ஆனார்.[18] சிறிசேன எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக) தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய அரசை அமைத்தார்.[19] 2015 மார்ச்சில் தேசிய அரசாங்கம் ஒன்றை அறிவித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் முக்கிய கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரை அமைச்சரவையில் சேர்த்தார்.[20]

தனது தேர்தல் அறிக்கையில் மைத்திரிபால சிறிசேன 100-நாள் வேலைத்திட்டத்தை அறிவித்து, அதன் பின்னர் நாடாளுமன்றம் 2015 மார்ச் 27 இல் கலைக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.[21] தனது 100-நாள் திட்டத்திற்கு அரசில் இருந்த ராசபக்சவின் ஆதரவாளர்களின் பலத்த எதிர்ப்பை அவர் எதிர்கொண்டார். ஆனாலும், அரசுத்தலைவரின் அதிகாரங்களைக் குறைக்கவும், பதவிக்காலத்தை இரண்டு தவணைகளுக்குக் குறைக்கவும் வழிவகுக்கக்கூடிய 19வது திருத்தச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில்-இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றினார்.[22] சிறிசேன 2015 சூன் 26 அன்று நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்.[23]

தேர்தல் முறைமை

பல-அங்கத்தவர்கள் கொண்ட 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை மூலம் போட்டியிடும் கட்சிகள், மற்றும் சுயேட்சைக் குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[24][25] ஏனைய 29 உறுப்பினர்களும் தேசியப் பட்டியல் மூலம் நியமிக்கப்படுகின்றனர்.[26]

18 வயதிற்கு மேற்பட்ட இலங்கைக் குடியுரிமை பெற்ற ஒருவர், ஒவ்வொரு ஆண்டும் சூன் 1 அன்று எந்த இடத்தில் சாதா­ரண வதி­வா­ள­ராக இருக்­கின்­றாரோ அந்த இடத்தில் தனது வாக்கைப் பதிவு செய்து கொள்­ளலாம்.[27] தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமல்ல. ஒவ்­வொரு வாக்­கா­ளரும் தத்தம் ஆளடை­யா­ளத்தை செல்­லு­ப­டி­யான ஆளடை­யாள ஆவணம் ஒன்றின் மூலம் நிரூ­பிக்க வேண்டும்.[27] வாக்காளர் ஒருவர் தமக்கு விருப்பமான ஒரு கட்சிக்கும், அக்கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஆகக்கூடியது மூவருக்கு தனது விருப்பத்தேர்வுகளையும் இடலாம். ஆனாலும் வேட்பாளர் விருப்பத்தேர்வு கட்டாயமானது அல்ல.[27]

தேர்தல் விபரங்கள்

தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் 2015 சூலை 6 முதல் 13 வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன.[3][10] தபால் மூல வாக்கெடுப்பு 2015 ஆகத்து 5 முதல் ஆகத்து 6 வரை நடைபெற்றன. பாடசாலை ஆசிரியர்கள், காவல்துறையினர் மற்றும் அரச ஊழியர்கள் 2015 ஆகத்து 3 இல் தபால் மூலம் வாக்களித்தனர்.[28][29] பொதுமக்கள் ஆகத்து 17 திங்கட்கிழமை அன்று வாக்களித்தனர்.[7]

தேர்தல் மாவட்ட அடிப்படையில் இட ஒதுக்கீடு

மாகாணம்தேர்தல் மாவட்டம்ஒதுக்கப்பட்ட இடங்கள்[30]
வடக்குயாழ்ப்பாணம்

வன்னி

07

06

வடமத்திஅனுராதபுரம்

பொலன்னறுவை

09

05

வடமேல்குருநாகல்

புத்தளம்

15

08

கிழக்குமட்டக்களப்பு

அம்பாறை (திகாமடுல்ல)

திருகோணமலை

05

07

04

மத்தியகண்டி

மாத்தளை

நுவரெலியா

12

05

08

மேல்கொழும்பு

கம்பகா

களுத்துறை

19

18

10

ஊவாபதுளை

மொனராகலை

08

05

சப்ரகமுவஇரத்தினபுரி

கேகாலை

11

09

தென்காலி

மாத்தறை

அம்பாந்தோட்டை

10

08

07

மொத்தம்196

போட்டியிட்ட கட்சிகளும் கூட்டணிகளும்

நாடாளுமன்றத்தின் 196 இடங்களுக்கு 21 பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் இருந்து 3,653 பேரும், சுயேட்சைக் குழுக்களில் இருந்து 2,498 பேரும் போட்டியிட்டனர்.[10][31] 12 கட்சிகள், 24 குழுக்களின் வேட்பு மனுக்கள் தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்கப்பட்டன.[32] ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) ஆகியன அனைத்து 22 மாவட்டங்களிலும் போட்டியிட்டன.[10]

  • ஜாதிக எல உறுமய கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் (ஐதேக) இணைந்து நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரில் கூட்டணி அமைத்தது. இக்கூட்டணி அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படாமையால் ஐதேகவின் யானை சின்னத்தில் போட்டியிட்டது. இக்கூட்டணியில் இடதுசாரிக் கட்சிகளில் இருந்து பிரிந்து சென்ற ஐக்கிய இடது முன்னணி, மற்றும் இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சில மூத்த அமைச்சர்கள் (ராஜித சேனரத்தின, அர்ஜுன ரணதுங்க, சரத் அமுனுகம) ஆகியோரும் இடம்பெற்றனர்.[33]
  • இலங்கையின் முக்கிய முசுலிம் அரசியல் கட்சியான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு மட்டக்களப்பு, வன்னி ஆகிய மாவட்டங்களில் தனித்து "மரம்" சின்னத்திலும், புத்தளம், களுத்துறை, அம்பாறை, குருநாகல், கண்டி, கம்பகா, திருகோணமலை மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் "யானை" சின்னத்திலும் போட்டியிட்டது.[34]
  • மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி ஐதேகவின் யானைச் சின்னத்தின் கீழ் கொழும்பு, நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கம்பகா மாவட்டங்களில் போட்டியிட்டது.[35]
  • பௌத்த மதவாத இயக்கமான பொது பல சேனா பொது சன பெரமுனை என்ற புதிய கட்சியை அமைத்து அனைத்து மாவட்டங்களிலும் தனித்துப் போட்டியிட்டது.[36]
  • மக்கள் விடுதலை முன்னணி.[37] சரத் பொன்சேகா தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி[38] ஆகியன தனித்துப் போட்டியிட்டன.

தேர்தல் வன்முறைகள்

2015 சூன் 29 அன்று ஐதேக ஆதரவாளர் ஒருவர் இரத்தினபுரி மாவட்டம், நிவித்திகலையில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[39][40] அனுராதபுரம், குருணாகல், மகியங்கனை, வெலிகமை ஆகிய இடங்களில் ஐதேக, ஐமசுகூ ஆதரவாளர்களுக்கிடையே கைகலப்புகள் இடம்பெற்றன.[41][42] 2015 சூலை 31 இல் கொட்டாஞ்சேனையில் ஐதேக வேட்பாளரும் அமைச்சருமான ரவி கருணாநாயக்க கலந்து கொண்ட கூட்டம் ஒன்றை நோக்கி இரண்டு வாகனங்களில் வந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு பெண் உட்பட இருவர் கொல்லப்பட்டனர்.[43][44] 2015 ஆகத்து 15 அன்று மட்டக்களப்பு மாவட்டம், ஓட்டமாவடி வீதி ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் ஒருவர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[45]

முடிவுகள்

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி 45.66% வாக்குகளுடன் 106 இடங்களைக் கைப்பற்றி முதலாவதாக வந்தது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 42.38% வாக்குகளுடன் 95 இடங்களைக் கைப்பற்றியது.[46][47] ராசபக்ச பிரதமராக வரும் தனது முயற்சியைக் கைவிட்டு தோல்வியை ஒப்புக் கொண்டார்.[48][49]

ஐதேக தலைமையிலான நஐதேமு ஆட்சி அமைக்க 7 இடங்கள் தேவையாக இருந்தது.[50][51] 2015 ஆகத்து 20 ஆம் நாள் இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய அரசு அமைக்க ஒப்புக் கொண்டது.[52][53] ரணில் விக்கிரமசிங்க 2015 ஆகத்து 21 அன்று இலங்கையின் 22வது பிரதமராகப் பொறுப்பேற்றார்.[54][55] புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க, ஐதேக பொதுச் செயலர் கபீர் ஹாசிம் ஆகியோர் கையெழுத்திட்டனர்.[56][57]

நாடளாவிய முடிவுகள்

மாவட்டம் வாரியாக வெற்றியீட்டிய கட்சிகள்
[உரை] – [தொகு]
2015 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்
கூட்டணிகளும் கட்சிகளும்வாக்குகள்%இருக்கைகள்
மாவட்டம்தேசியப் பட்டியல்மொத்தம்
 நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி[58]5,098,91645.66%9313106
 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி4,732,66442.38%831295
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு[63]515,9634.62%14216
 மக்கள் விடுதலை முன்னணி543,9444.87%426
 சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு[12]44,1930.40%101
 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி33,4810.30%101
 சுயேட்சைகள்42,8280.38%000
 அகில இலங்கை மக்கள் காங்கிரசு[59]33,1020.30%000
 சனநாயகக் கட்சி28,5870.26%000
பௌத்த மக்கள் முன்னணி20,3770.18%000
 தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி[64]18,6440.17%000
 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்[60]17,1070.15%000
 முன்னிலை சோசலிசக் கட்சி7,3490.07%000
ஐக்கிய மக்கள் கட்சி5,3530.05%000
ஏனையோர்24,4670.22%000
தகுதியான வாக்குகள்11,166,975100.00%19629225
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்517,123
மொத்த வாக்குகள்11,684,098
பதிவு செய்த வாக்காளர்கள்15,044,490
வாக்குவீதம்77.66%

மாவட்ட வாரியாக

(நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி)

(தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு)

மாவட்ட வாரியாக 2015 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[65]
தேர்தல்
மாவட்டம்
மாகாணம்ஐதேகஐமசுகூததேகூமவிமுஏனையோர்மொத்தம்%
வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்
யாழ்ப்பாணம்வடக்கு20,0256.67%117,3095.76%0207,57769.12%52470.08%055,14818.36%1300,309100.00%761.56%
வன்னிவடக்கு39,51323.98%120,96512.72%189,88654.55%48760.53%013,5358.21%0164,775100.00%671.89%
திருகோணமலைகிழக்கு83,63846.36%238,46321.32%145,89425.44%12,5561.42%09,8455.46%0180,396100.00%474.34%
மட்டக்களப்புகிழக்கு32,35913.55%132,23213.49%0127,18553.253810.03%038,47716.11%1238,846100.00%569.11%
அம்பாறைகிழக்கு151,01346.30%489,33427.39%245,42113.92%15,3911.65%035,03710.74%0326,195100.00%773.99%
பொலன்னறுவைவடமத்திய118,84550.26%3103,17243.63%2---13,4975.71%09480.40%0236,462100.00%579.81%
அனுராதபுரம்வடமத்திய213,07244.82%4229,85648.35%5---28,7016.04%03,7550.79%0475,383100.00%979.13%
பதுளைஊவா258,84454.76%5179,45937.97%3---21,4454.54%012,9342.74%0472,682100.00%880.07%
மொனராகலைஊவா110,37241.97%2138,13652.53%3---13,6265.18%08550.33%0262,988100.00%580.13%
கேகாலைசபரகமுவா247,46749.52%5227,20845.47%4---18,1843.64%06,7891.37%0499,694100.00%979.81%
இரத்தினபுரிசபரகமுவா284,11744.94%5323,63651.19%6---21,5253.40%02,9180.46%0632,196100.00%1180.88%
காலிதெற்கு265,81042.48%4312,51850.07%6---37,7786.05%08,7351.40%0624,211100.00%1078.00%
அம்பாந்தோட்டைதெற்கு130,43335.65%2196,98053.84%4---36,5279.98%11,8890.52%0365,829100.00%781.20%
மாத்தறைதெற்கு186,67539.08%3250,50552.44%5---35,2707.38%05,2771.10%0477,717100.00%878.61%
கொழும்புமேற்கு640,74353.00%11474,06339.21%7---81,3916.73%112,7021.05%01,208,899100.00%1978.93%
கம்பகாமேற்கு577,00447.13%9549,95844.92%8---87,8807.18%19,5070.78%01,224,401100.00%1878.21%
களுத்துறைமேற்கு310,23444.47%4338,80148.56%5---38,4755.52%110,1251.45%0697,635100.00%1080.13%
புத்தளம்வடமேற்கு180,18550.40%5153,13042.83%3---12,2113.42%011,9823.35%0357,508100.00%868.83%
குருணாகலைவடமேற்கு441,27545.85%7474,12449.26%8---41,0774.27%05,9470.62%0962,423100.00%1579.63%
கண்டிமத்திய440,76155.57%7309,15238.98%5---30,6693.87%012,5181.58%0793,100100.00%1279.13%
மாத்தளைமத்திய138,24149.84%3126,31545.54%2---10,9473.95%01,8770.68%0277,380100.00%578.73%
நுவரெலியாமத்திய228,92059.01%5147,34837.98%3---5,5901.44%06,0881.57%0387,946100.00%878.77%
தேசியப் பட்டியல்13122229
மொத்தம்5,098,91645.66%1064,732,66442.38%95515,9634.62%16543,9444.87%6275,4882.47%211,166,975100.00%22574.23%

உலக நாடுகளின் கருத்து

  •  ஐக்கிய நாடுகள் - பொதுச் செயலர் பான் கி மூன் 2015 ஆகத்து 18 இல் விடுத்த அறிக்கையில், "மிகவும் அமைதியான அனைவரும் பங்களிப்பு செய்த பொதுத் தேர்தலிற்காக தனது பாராட்டுகளை தெரிவித்ததுடன்", "நல்லாட்சி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கங்களில் மேலும் முன்னேற்றங்கள் மேற்கொள்ள வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.[66][67]
  •  இந்தியா - பிரதமர் நரேந்திர மோதி ரணில் விக்கிரமசிங்கவை தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்தார்.[68][69]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்களும் குறிப்புகளும்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்