ஆரணி குப்புசாமி
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
ஆரணி குப்புசாமி முதலியார் (1866/67-1925) ஒரு தமிழ் எழுத்தாளர். தமிழ்ப் புதின எழுத்தின் முன்னோடிகளில் ஒருவர். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் துப்பறியும் புதினங்கள் பலவற்றை எழுதியுள்ளார். ஒன்பது பாகங்களாக வெளியான இரத்தினபுரி இரகசியம் இவரது குறிப்பிடத்தக்க படைப்பு.
இவரது முதல் புதினத்தின் பெயர் லீலா; மொத்தம் 75 புதினங்களை எழுதினார். சிட்டி பெ. கோ. சுந்தரராஜனும், சோ. சிவபாதசுந்தரமும் இணைந்து எழுதிய தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் (1977) எனும் நூலில் 1911 இல் ஒரு இதழில் குப்புசாமி முதலியாரின் புதினமான மதனகண்டி விமர்சனம் செய்யப்பட்டது என்ற தகவல் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் இவர் 1911 அல்லது அதற்கு முன்பிருந்தே எழுதத் தொடங்கிவிட்டார் எனத் தெரிகிறது. 1917ம் ஆண்டு வரை 31க்கும் மேற்பட்ட புதினங்களை எழுதியிருந்தார். ஆனந்த போதினி இதழில் இவரது புதினங்கள் தொடர்களாக வெளியாகின. குப்புசாமி முதலியார் 1920கள் வரை தொடர்ந்து புதினங்கள் எழுதினார். ஷெர்லக் ஹோம்ஸ் கதாப்பாத்திரத்தைத் தழுவி ஆனந்த சிங் என்ற துப்பறிவாளர் கதாபாத்திரத்தை உருவாக்கினார். இவரது படைப்புகள் ஆர்தர் கொனன் டொயில்,ஜார்ஜ் டபிள்யு. எம். ரேனால்ட்ஸ் போன்ற ஆங்கில குற்றப்புனைவு எழுத்தாளர்களின் படைப்புகளைத் தழுவி அமைந்தன.
கொழும்பிலிருந்து வெளியான சஞ்சீவகாரணி என்ற இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
இவர் தொடங்கிய பகவத் கீதையின் உரைநடை மொழிபெயர்ப்பு முழுமை பெறவில்லை.