ஆகா கான் பள்ளி, டாக்கா
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
ஆகா கான் பள்ளி, டாக்கா, ஒரு ஆங்கில நடுத்தர பள்ளி ஆகும். இது பங்களாதேஷின் டாக்காவில் உள்ள உத்தரா தானா பகுதியில் உள்ளது.[1][2] இப்பள்ளி, ஆகா கான் மேம்பாட்டு வலையமைப்பு (ஏ.கே.டி.என்) மற்றும் பங்களாதேஷின் ஆகா கான் கல்வி சேவை (ஏ.கே.இ.எஸ், பி).போன்றவற்றின் கீழ் செயல்படுகிறது. இது 1988 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பங்களாதேஷின் ஆரம்பகால தனியார் ஆங்கில நடுத்தர பள்ளிகளில் ஒன்றாகும்.[3] இது, டாக்காவின் சித்தேஷ்வரியில் உள்ள ஒரு சிறிய வளாகத்தில் தொடங்கப்பட்டது.
ஆகா கான் பள்ளி, டாக்கா 1988 ஆம் ஆண்டில், பங்களாதேஷின் ஆகா கான் கல்வி சேவையின் ஒரு நிறுவனமான இஸ்மாயிலி தாரிகா மற்றும் மத கல்வி வாரியத்தின் (ஐ.டி.ஆர்.இ.பி.) நூலகத்தில் உருவாக்கப்பட்டது. தற்போதைய அமைப்பின் அடித்தளங்களை சர் சுல்தான் முகமது ஷா, மூன்றாம் ஆகா கான் போன்றவர்கள் அமைத்துள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் 200 க்கும் மேற்பட்ட பள்ளிகள் இவர்களின் வழிகாட்டுதலுடன் நிறுவப்பட்டன. அவற்றில் முதலாவது 1905 ஆம் ஆண்டில் சான்சிபார், பாகிஸ்தானில் குவாடூர் மற்றும் இந்தியாவில் முந்திரா போன்ற இடங்களில் நிறுவப்பட்டவை ஆகும்.[3] 1970 களில் ஆகா கான் கல்வி சேவை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டதிலிருந்து, பள்ளிகள் மையமாக நிறுவப்பட்டு நிருவகிக்கப்படுகின்றன. இப் பள்ளி முதலில் 25 மாணவர்கள் மற்றும் 7 கற்பித்தல் ஊழியர்களுடன் தொடங்கப்பட்டது.[1] இது, ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள வகுப்பறைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 1990 இல் தற்போதைய மேல் நிலை பிரிவு உத்தராவில் திறக்கப்பட்டது.[1] மழலையர் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளி பிரிவுகள் முறையே 1999 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் திறக்கப்பட்டன.
ஏப்ரல் 2009 இல் இந்த பள்ளி ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியது, இது ஒரு சர்வதேச அளவிலான உலகப் பள்ளியாக அங்கீகரிக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டில், மிக நீண்ட காலம் இப் பள்ளியின் கல்வித் தலைவராக இருந்த ஜார்ஜ் ஜி. கேஸ் ஓய்வு பெற்றார், இவர், ஜூலை 1998 முதல் ஜூன் 2009 வரை பள்ளியில் பணியாற்றினார்.[1] ஜாக்குலின் பராய் என்பவர், 2009 முதல் 2011 வரை பள்ளியின் தலைவராக பணியாற்றினார்.
கிரேக் சால்மன், தற்போதைய கல்வித் தலைவராக உள்ளார்.[4]
2013 ஆம் ஆண்டு நிலவரப்படி, இப்பள்ளியில் 1,222 மாணவர்களும் மற்றும் 118 ஆசிரியர்களும் உள்ளனர். இப் பள்ளியில் மழலையர் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இங்கு பிரித்தானிய தேசிய பாடத்திட்டத்தைத் தொடர்ந்து, ஐ.ஜி.சி.எஸ்.இ மற்றும் ஜி.சி.இ.மேம்பட்ட நிலை பாடத்திட்டம் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது.
பஹ்மிதா சவுத்ரி மேல்நிலைப் பள்ளியின் தலைவராகவும், சத்திலா ரேசா நடுநிலைப் பள்ளித் தலைவராகவும் பணியாற்றி வருகின்றனர்.[4] இந்த கல்வி வாரியத்தின் தலைவர் திரு. சுலைமான் அஜனி ஆவார். இப் பள்ளி ஆண்டு நிகழ்வுகள், செயல்பாடுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது. ஆண்டுதோறும், அகா கான் பள்ளியின் சாதாரண மற்றும் மேம்பட்ட நிலை தேர்வாளர்கள் பள்ளித் தேர்வுகளில் சிறப்பாக செயல்படுகிறார்கள், இது கேம்பிரிட்ஜ் சர்வதேச தேர்வுகளைத் தொடர்ந்து பள்ளிகளுக்கான டெய்லி ஸ்டார் விருதுகளில் கலந்து கொண்டதற்கு சான்றாகும்.
ஏப்ரல் 2009 முதல் இந்த பள்ளி ஒரு ஐபி உலக பள்ளியாக இருந்து வருகிறது. இது ஐபி முதன்மை ஆண்டு திட்டத்தை ஆங்கிலத்தில் வழங்குகிறது. கூடுதலாக, பள்ளி முழுமையான ஐபி பாடத்திட்டத்திற்கு நகர்கிறது, இது டாக்காவின் பசுந்தராவில் புதிய வளாகத்தில் நடத்தப்படும். ஐபி திட்டத்தை வழங்கும் நிறுவனம் தி ஆகா கான் அகாடமி என்று பெயரிடப்படும்.
முன்மொழியப்பட்ட அகா கான் அகாடமி பல ஆண்டுகளாக திட்டமிடல் கட்டங்களில் உள்ளது, மேலும் ஐபி முதன்மை ஆண்டு திட்டத்தை மழலையர் பள்ளி மற்றும் 1 முதல் 5 தரங்களில் செயல்படுத்துகிறது.
இளவரசர் கரீம் ஆகா கான் IV, அண்மையில் பங்களாதேஷுக்கு விஜயம் செய்தபோது, டாக்காவின் பசுந்தாராவில் உள்ள ஆகா கான் அகாதமிக்கு அடிக்கல் நாட்டினார். இது ஆரம்ப ஆண்டு திட்டம் (PYP), 6 முதல் 10 ஆம் வகுப்புக்கான இடைக்கால திட்டம் (MYP) மற்றும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிப்ளோமா திட்டம் (IB-DP) வழங்கும் முழு அளவிலான IBO அங்கீகரிக்கப்பட்ட பள்ளியாக இருக்கும். இருப்பினும், சிறிய கட்டுமான பணிகள் நிறைவேறும் நிலையில் உள்ளன.
ஆகா கான் அகாதமி, அமெரிக்காவின் மாசசூசெட்ஸ், அன்டோவரில் உள்ள பிலிப்ஸ் அகாடமி மற்றும் ஜெர்மனியின் சேலத்தில் உள்ள ஷூல் ஸ்க்லோஸ் சேலம் ஆகியவற்றுடன் சர்வதேச கல்வி கூட்டு (ஐஏபி) ஒப்பந்தங்களைக் கொண்டிருக்கிறது.