அழுகுடல்
அழுகுடல் (Carrion) (ஆங்கிலச் சொல்லான கேரீயான்லத்தீன் சொல்லான காரோவிலிருந்து வந்தது. இதன் பொருள் "இறைச்சி" என்பதாகும்) என்பது மனித உடல் உட்பட இறந்த விலங்குகளின் சிதைந்துபோகும் சதையினைக் குறிப்பதாகும்.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/49/WedgetailEagleCarrion.jpg/220px-WedgetailEagleCarrion.jpg)
கண்ணோட்டம்
பெரும்பாலான சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஊனுண்ணி மற்றும் அனைத்துண்ணிகளுக்கு முக்கிய உணவாக அழுகுடல் உள்ளது. அழுகுடலை உண்ணும் தோட்டி விலங்குகளாக காகங்கள், பிணந்தின்னிக் கழுகுகள், புது உலகு கழுகு, பாறுகள், கழுகுகள்,[1] கழுதைப்புலி,[2] விர்ஜீனியா பைக்கீரி, டாஸ்மேனியன் டெவில்,[3] அமெரிக்கக் குள்ளநரி[4] மற்றும் கொமோடோ டிராகன்கள் ஆகியவை அடங்கும். பல முதுகெலும்பிலிகள், புதைக்கும் வண்டுகள், அத்துடன் கேலிபோரிட் ஈக்கள் (இதில் மிக முக்கியமான சிற்றினம் கேலிப்போரா வாமிடோரியா) சதை-ஈக்கள் அழுகிய உடலை உணவாக உண்பதன் மூலம் நைட்ரஜன் மறுசுழற்சி மற்றும் விலங்கு கார்பனில் முக்கிய பங்குவகிக்கின்றது.[5]
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fe/Flies_settle_on_a_sheep_carrion.jpg/220px-Flies_settle_on_a_sheep_carrion.jpg)
விலங்கு இறக்கும் தருணத்தில் உடல் சிதைவடையத் தொடங்குகிறது. மேலும் இது அதிகளவில் பூச்சிகளை ஈர்க்கின்றன. இப்பொழுதுபாக்டீரியாக்கள் பெருகத்தொடங்கி உடலைச் சிதைக்கின்றன. விலங்கு இறந்த சில நாட்களுக்குப் பிறகு, அதன் உடல் பாக்டீரியாக்கள் இருப்பதாலும், அழுகுடலிலிருந்து கேடவெரின் மற்றும் புட்ரெசின் வெளியேற்றத்தால் துர்நாற்றம் வெளியேறத் தொடங்கும்.
சில தாவரங்களும் பூஞ்சைகளும் அழுகுடல் சிதைவது போன்ற மத்தினை வெளியிட்டு இனப்பெருக்கத்திற்கு உதவும் பூச்சிகளை ஈர்க்கின்றன. இத்தகைய தாவரங்கள் அழுகுடல் பூக்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஸ்டிங்க்ஹார்ன் காளான்கள் இந்த குணாதிசயத்துடனான பூஞ்சைக்கு எடுத்துக்காட்டாகும்.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/23/Coyoteelk.jpg/220px-Coyoteelk.jpg)
சில நேரங்களில் நோயினால் பாதிக்கப்பட்ட அழுகுடலைத் தொடக்கூடாது. இலக்கியத்தில் இறந்த மற்றும் அழுகிய உடல்களை விவரிக்க கேரியன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டு வில்லியம் சேக்சுபியரின் ஜூலியஸ் சீசர் (III.i) நாடகம்.[6]
'ஹவோக்' என்று அழவும், போரின் நாய்களை நழுவ விடவும்; இந்த மோசமான செயல் பூமிக்கு மேலே இருக்கும் அழுகுடல் (கேரியன்) ஆண்களுடன், அடக்கம் செய்ய உறுமல்.
மற்றொரு உதாரணம் டேனியல் டெஃபோவின் ராபின்சன் குரூசோவில் முதன்மை கதாபாத்திரம் உணவுக்காக அறியப்படாத ஒரு பறவையைக் கொன்றுவிடுகிறது. ஆனால் "அதன் சதை அழுகுடல் (கேரியன்), மற்றும் எதற்கும் பொருந்தாது" என்ற வரிகள் வருவதைக் காணலாம்.
நோஹைட் சட்டத்தில்
உல்லாவின் (டால்முடிஸ்ட்) முப்பது எண்ணிக்கை சட்டத்தில் மனிதர்கள் அழுகுடலை உட்கொள்வதை தடைசெய்யப்பட்டுள்ளது.[7] இந்த எண்ணிக்கை நிலையான ஏழு சட்ட எண்ணிக்கையுடன் கூடுதலாக உள்ளது. பல நூற்றாண்டுகளாக இழந்த பின்னர் ஷ்முவேல் பென் ஹோஃப்னி காவ்னின் ஜூடியோ-அரபு எழுத்திலிருந்து வெளியிடப்பட்டது.[8]