அருண் சோரி
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
அருண் சோரி | |
---|---|
![]() Arun Shourie at Horasis Global இந்தியா Business Meeting 2009[1] | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நவம்பர் 2, 1941 (1941-11-02) (அகவை 82) ஜலந்தர், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | அனிதா |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | பத்திரிக்கையாளர் & உலக வங்கி பொருளாதார நிபுணர் |
அருண் ஷோரி (பிறந்தது நவம்பர் 2, 1941) ஒரு இந்திய பத்திரிகையாளர், எழுத்தாளர், புத்திமான் மற்றும் அரசியல்வாதி அவர் உலக வங்கியின் பொருளாதார நிபுணராகவும் (1968-72 ஆண்டுகள் வரையிலும் பின்னர் 1975-77), இந்திய திட்ட கமிஷன் ஆலோசகராகவும், இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியராகவும், இந்திய அரசின் (1998-2004) ஒரு அமைச்சராகவும் இருந்துள்ளார்.[2]
இந்தியா, ஜலந்தரை சேர்ந்த ஹரி தேவ் ஷோரி என்பவருக்கு மகனாக பிறந்தார். அவர் தந்தை சமூகத்தினரின் தனி உரிமைகள் சம்பந்தமான (ஐஏஎஸ்) அதிகாரியாக இருந்து பின் நுகர்வோர் உரிமை செயல் வீரராக மாறியவர். இந்திய பிரிவினையின் போது லாஹூரில் நீதிபதியாக இருந்த அவர் தந்தை, பின்னர் இந்தியாவிற்கு தன் குடும்பத்துடன் வந்தார். அருண் பாரக்கம்பா மாடர்ன் பள்ளியிலும், டெல்லி செயின்ட் ஸ்டீபனிலும் கல்வி பயின்றார். அமெரிக்க ஐக்கிய நாட்டின் சிரகூஸ் பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.[3] அவரது சகோதரி நளினி சிங் ஒரு பத்திரிகையாளர் ஆவார்.
1979 ஆம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் செயற்குழு ஆசிரியராக இருந்த போது பல தொடர்களை அவர் கைப்பட எழுதினார். அவற்றில் அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் நிகழும் பல்வேறு ஊழல்களை அம்பலப்படுத்தினார். அவற்றுள் மிக முக்கியமான சம்பவம் 'இந்திய வாட்டர்கேட்' என்று அழைக்கப்பெற்ற ஊழல் சம்பவமாகும்.[4] அன்றைய மகாராஷ்டிர முதல் அமைச்சராக இருந்த அப்துல் ரஹ்மான் அந்துலேவுக்கு எதிராக தனி மனிதனாக ஷோரி 1981 ஆம் ஆண்டு தீவிர போராட்டம் நடத்தினார். அரசாங்க உதவியை நம்பியிருந்த தொழில் நிறுவனங்களை மிரட்டி பல லட்சங்களை திரட்டி இந்திரா காந்தி பெயர் கொண்ட அறக்கட்டளை ஒன்றில் சேர்த்ததாக அவர் மீது குற்றம் சாட்டினார். இறுதியாக அந்த செய்தி மூலம் அவர் முதல் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பத்திரிகை எழுத்தின் மூலம் இந்தியாவில் மிக பெரிய பொறுப்பு வகிக்கும் அதிகாரி ராஜினாமா செய்தது காந்திக்கும், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் மிகப்பெரிய அவமானமாக தீர்ந்தது.[5]
ஷோரியின் வெளிப்பாடுகள் மும்பை இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் நீண்ட தொழிலாளர் பிரச்சினையை ஏற்படுத்தியது. அந்துலேவுடன் தொடர்புடைய ஒரு தொழிலாளர் சங்கம் இந்தியாவில் இதர பத்திரிக்கை நிறுவனங்கள் வழங்கும் குறைந்த பட்ச ஊதிய தொகையை விட இரண்டு மடங்கு அளிக்க வேண்டும் என்று வேலை நிறுத்தம் செய்ய தொழிலாளர்களை தூண்டியது. இந்தியன் எக்ஸ்பிரஸ் மீது பல்வேறு நிறுவனங்கள் வழக்கு தொடுக்கவும், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவும் காரணமாக அமைந்தது. அரசாங்கத்தின் தொடர்ந்த வற்புறுத்தலினால் 1982ஆம் ஆண்டு பத்திரிகை உரிமையாளர் ராம்நாத் கோயங்கா ஷோரியை வெளியேற்றினார்.[6]
1982 ஆம் ஆண்டு முதல் 1986 வரை பீப்பில்ஸ் யூனியன் பார் சிவில் லிபெர்டிஸ் என்ற அமைப்பிற்கு பொது செயலாளராக இருந்து கொண்டே பல செய்தித்தாள்களிலும், பத்திரிகைகளிலும் ஷோரி எழுதினார். 1986 ஆம் ஆண்டில் டைம்ஸ் ஆப் இந்தியாவின் செயற்குழு ஆசிரியராக சேர்ந்தார் ஆனால் 1987 ஆம் ஆண்டில் கோயங்கா அவரை திரும்பவும் இந்தியன் எக்ஸ்பிரசில் சேர்த்துக் கொண்டார். அப்போதைய பிரதம மந்திரியாக இருந்த ராஜீவ் காந்தி மீது போபோர்ஸ் ஹோவித்சர் துப்பாக்கி வாங்கியது தொடர்பான முறைகேடுகளை ஷோரி அம்பலப்படுத்தினார். இது பின்னர் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் ராஜீவ் காந்தியின் தோல்விக்கு காரணமாக அது அமைந்தது.
பத்திரிகை சுதந்திரம் சார்பாக பல போராட்டங்களை ஷோரி நடத்தினார். அவற்றுள் 1988 ஆம் ஆண்டில் அரசாங்கம் கொண்டு வர முயன்ற அவதூறு சட்டத்திற்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் மிக முக்கியமானதாக அமைந்தது. அத்தகைய சட்டம் நாடாளுமன்றத்தில் மிக விரைவாக கொண்டு வருவதற்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் செயல்பாடுகளை தடுக்க வேண்டும் என்ற நோக்கமே மிக முக்கிய காரணம் என்று பலர் கருதினார்கள். அனைத்து ஊடகப் பிரிவினரும் ஷோரிக்கு ஆதரவு தெரிவித்து அந்த முயற்சியை பலமாக எதிர்த்தனர்.
ஒரு சமயத்தில் இந்தியன் எக்ஸ்பிரசுக்கு எதிராக அரசாங்கம் 300 வழக்குகளை பதிவு செய்தது. வங்கி கடன் உதவி ரத்தானது. இருந்தாலும் ஷோரி அரசாங்க ஊழல்களுக்கு எதிராக தனது போராட்டத்தை 1990 வரை தொடர்ந்தார். அச்சமயம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழாசிரியருக்குரிய கொள்கைகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் ராஜினாமா செய்ய நேர்ந்தது. அரசாங்க வேலைகளில் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான இட ஒதுக்கீடு செய்வதற்காக அப்போதைய பிரதம மந்திரி வி.பி.சிங் தலைமையிலான அரசு மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த மேற்கொண்ட முயற்சிகளை ஷோரி எதிர்த்ததும் ஒரு காரணமாகும். அதற்கு பின் அவர் தனது கவனத்தை பல நூல்களை எழுதுவதில் திருப்பினார். அவருடைய எழுத்துக்கள் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு மொழிகளில் 30க்கும் மேற்பட்ட செய்தித்தாள்களில் வெளிவந்தன.
ஷோரி பாரதீய ஜனதா கட்சியின் (பிஜேபி) ஒரு உறுப்பினர் ஆவார். அவர் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்துள்ளார், மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதம மந்திரியாக இருந்த போது, இந்திய அரசாங்கத்தில் டிஸ்இன்வெஸ்ட்மென்ட் (முதலீட்டை திரும்பிப் பெறுதல்), தகவல் மற்றும் தொலை தொடர்பு, மந்திரியாக பதவி வகித்தார். டிஸ்இன்வெஸ்ட்மென்ட் மந்திரியாக இருந்த போது மாருதி, விஎஸ்என்எல் மற்றும் ஹிந்துஸ்தான் ஜின்க் ஆகியவற்றின் பங்குகளை விற்க வழிவகை செய்தார். அவருடைய மந்திரி பொறுப்பு சர்ச்சைக்குரியதாக அமைந்தது. ஆனால் அவரும், அவர் செயலாளர் பிரதிப் பைஜலும் பல நடவடிக்கைகளை மிகச்சிறந்த முறையில் துவக்கியதற்காக மதித்தனர். இந்தியாவின் 100 முன்னணி தலைமை நிர்வாக அதிகாரி (சிஈஒ)-களுக்கான 2004 பிப்ரவரி வாக்கெடுப்பில் வாஜ்பாய் அரசாங்கத்தின் தலை சிறந்த அமைச்சராக ஷோரி தேர்ந்தேடுக்கபட்டார்.[7]
2000 ஆம் ஆண்டு ஷோரி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உள்ளூர் வளர்ச்சி திட்ட நிதியிலிருந்து செலவு செய்யக்கூடிய முழுத்தொகையான ரூபாய் 11.90 கோடியையும் கான்பூர் இந்தியன் இன்ஸ்டிட்டியுட் ஆப் டெக்நாலஜியின் பயோ-சயன்சஸ் மற்றும் பயோ-இஞ்சிநியரிங் பிரிவை]] அமைப்பதற்கு அர்பணித்தார். மறுபடியும் 2005 ஆம் ஆண்டில் தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அதே கல்லூரிக்கு சுற்றுப்புறச்சூழல் அறிவியல் மற்றும் சுற்றுபுறச்சூழல் பொறியியல்துறை தனி கட்டிடத்திற்கு அனைத்து வசதிகளையும் செய்வதற்கு ரூபாய் 11 கோடிகள் அளித்தார்.
2007 ஆம் ஆண்டு பிரதிபா பாட்டில் இந்திய ஜனாதிபதியாக நியமிக்கப்படுவதை எதிர்த்தவர்களில் ஷோரி மிக முக்கியமானவர் ஆவார். 'இப்படி குற்றம் சாட்டப்பெற்றவர் இந்திய ஜனாதிபதியாக ஆவதற்கு தகுதி உடையவர்தானா?' என்ற தலைப்பில் வெளியான சிறு நூலில் அருண் ஷோரி இரு கட்டுரைகள் எழுதினார். அக்கட்டுரையில் காங்கிரஸ் வேட்பாளரின் மிகவும் கேள்விக்குறியான கடந்த கால வாழ்க்கையை பற்றி விவாதித்திருந்தார். கரன் தாபருடன் நடந்த நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஷோரி, பிரதிபா பாட்டில் துவங்கிய பிரதிபா மகிலா சஹாகரி வங்கியில் அவரும் மற்றும் அவரது குடும்பத்தினரும் பொறுப்பில் இருந்த போது எப்படி பணத்தை சுரண்டினர் என்பதை வலுவான பல ஆதாரங்களுடன் விளக்கினார். பிரதிபா பாட்டில் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கிய கடன் தொகைக்கான வட்டியை சட்ட விரோதமாக தள்ளுபடி செய்தது கண்டு பிடித்ததால் 2003 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி அந்த வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது.[8] அவருடைய சகோதரார் ஜி.என்.பாட்டில் மீதான கொலை குற்றச்சாட்டு வழக்கில் நீதியை தடுக்க முயன்றதாகவும் அவர் மீது ஷோரி குற்றம் சாட்டினார்.
2009 ஆம் ஆண்டு பொது தேர்தலில் பிஜேபி தோல்வியுற்றதை தொடர்ந்து, அக்கட்சியினுள் தோல்விக்கான காரணம் குறித்த தன்னிலை விளக்கம் மற்றும் பொறுப்பு போன்றவற்றை பற்றி விவாதிக்க வேண்டி யஸ்வந்த் சின்ஹா மற்றும் ஜஸ்வந்த் சிங் ஆகியோருடன் சேர்ந்து அருண் ஷோரி குரல் கொடுத்தார். முஹம்மது அலி ஜின்னாவை தனது நூலில் போற்றியதாக மூத்த பிஜேபி தலைவர் ஜஸ்வந்த் சிங் கட்சியிலிருந்து வெளியேற்றிய பொழுது, விரும்பதகாத சம்பவங்கள் நடை பெற்றன. ஜஸ்வந்த் சிங்கை ஆதரித்து இந்தியன் எக்ஸ்ப்ரஸில் எழுதிய கட்டுரையில் ஷோரி பிஜேபி கட்சி தலைவர் ராஜ்நாத் சிங்கின் எதேச்சதிகாரம் பற்றி குறிப்பிடும்படியாக ஹம்ப்டி டம்ப்டி மற்றும் அலைஸ் இன் ப்லேன்டெர்லாந்து போன்ற சொற்றொடர்களை பயன்படுத்தினார்.[9]
ஷோரியின் மனைவி அனிதா ஷோரி மற்றும் அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
அவரது எழுத்துக்கள் நாட்டில் அவருக்கு கணிசமான ரசிகர்களை பெற்று தந்துள்ளது. மேலும் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல அங்கீகாரங்களை பெற்றுள்ளார். அவற்றுள் சில - பத்ம பூஷண், மக்சேசே பரிசு, தாதாபாய் நவரோஜி விருது, ஆஸ்டர் விருது கே.எஸ்.ஹெக்டே விருது, சிறந்த சர்வதேச ஆசிரியர் ஆண்டு விருது மற்றும் பதிப்பக உரிமை விருது[சான்று தேவை]
துணை எழுத்தாளர்: