கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனிதா அக்னிஹோத்ரி (ஆங்கிலம்: Anita Agnihotri; வங்காள மொழி: অনিতা অগ্নিহোত্রী ; பிறப்பு 24 செப்டம்பர் 1956) என்பவர் இந்தியவினை சேர்ந்த பெங்காலி எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இவரது எழுத்துக்கள் ஆங்கிலம், சுவீடன் மற்றும் ஜெர்மன் உள்ளிட்ட முக்கிய இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் (இந்திய ஆட்சிப் பணி 1980 தொகுதி). இவர் இந்தியாவில் வசிக்கிறார்.[1]
இவர் 1980-ல் ஒடிசா மாநில இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் குடிமைச் சேவையில் 37 வருட அனுபவமுடையவர். ஆட்சிப்பணி அதிகாரியாக அனிதா ஒடிசாவின் சுந்தர்கட் மாவட்டத்தின் ஆட்சியராகவும், ஜவுளி மற்றும் தொழில்துறை போன்ற துறைகளில் முதன்மை செயலாளராகவும் இருந்துள்ளார். 1991-ல், இவர் இந்திய ஆட்சிப் பணியிலிருந்து கல்வி விடுப்பில் ஐக்கிய இராச்சியத்தின் நார்விச்சில் உள்ள கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில் வளர்ச்சிப் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
மத்திய அரசில் அனிதா 1996 மற்றும் 2001க்கு இடையில் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகத்தில் கூட்டுத் தலைமை இயக்குநராகவும், பின்னர் 2008-2011-ல் மும்பை சாந்தாகுரூசு மின்னணு ஏற்றுமதி செயலாக்க மண்டல மேம்பாட்டு ஆணையராகவும் இணைச் செயலாளராக இருந்தார். தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராகவும் இருந்துள்ளார். அனிதா இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் செயலாளராக 2016-ல் ஓய்வு பெற்றார்.
எழுதுத்தாளராக
அனிதா சிறு வயதிலேயே எழுதத் தொடங்கினார். எழுத்தாளர் பிமல் கர் இவரது இலக்கிய வாழ்க்கையைத் தொடர ஊக்குவித்தார். பள்ளி மாணவியாக, புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரான சத்யஜித் ரேயின் குழந்தைகள் பத்திரிகையான சந்தேஷ்சில் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவரது எழுத்துலகப் பங்களிப்புகள் புகழ்பெற்ற பெங்காலி எழுத்தாளர் மகாசுவேதா தேவியின் எழுத்துடன் ஒப்பிடப்பட்டுள்ளது.[2]
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் செயலாளர், அனிதா அக்னிகோத்ரி
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
இந்து பாசு சுமிருதி விருது
சாகித்திய சேது விருது
பங்களா அகாதமி சோமன் சந்தா விருது, (நந்திகிராமில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனிதா இந்த விருதை திருப்பி அளித்தார்)
சரத் விருது
பங்கிய சாகித்திய பரிஷத் சம்மான்
கோல்போமேலா விருது
சைலஜானந்தா சுமிருதி விருது
கஜேந்திர குமார் மித்ரா சுமிருதி விருது
பிரதிபா பாசு ஸ்மிருதி விருது
வங்காள இலக்கியத்திற்கான பங்களிப்பிற்காகக் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பூபன் மோகினி தாசி தங்கப் பதக்கம்
பொருளாதார நிபுணர்-குறுக்கெழுத்து விருது, 2011 ஆம் ஆண்டுக்கான 'இந்திய மொழி புனைகதை மொழிபெயர்ப்பு' பிரிவில் அனிதாவின் பதினேழு கதைகளின் தொகுப்பு, அருணவ சின்ஹாவால் பெங்காலி மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.
கோஞ்ச் சாகித்திய விருது 2022, கோஞ்ச் சாகித்திய பத்ரிகா, மேற்கு வங்கம், இந்தியாவினால் வழங்கப்பட்டது.[3]