பேச்சு:தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்
மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
மேலே உள்ள சுட்டி, ஒரு மொழி ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கு அடிப்படை காரணங்களை எடுத்துரைக்கின்றது. தமிழ் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் பார்க்க, ஒரு மொழி ஏன் பாதுகாக்கப்படவேண்டும் என்று நிறுவுதல் முக்கியம். --Natkeeran 01:38, 16 மார்ச் 2007 (UTC)
எல்லாப் பயனர்களும் படிக்கவேண்டிய கட்டுரை. நற்கீரனுக்கு நன்றிகள். என்று தமிழர்கள் தாங்கள் பணம் கொடுத்துச் செல்லும் இசை, நடன நிகழ்வுகளிலே தமிழ் வேண்டும், தாம் செல்லும் கோயில்களில் தமிழ் வேண்டும், தமிழ் பேசும் தாய்நிலங்களிலாவது கல்வி (10 ஆவது வரையாகிலும்) தமிழில் வேண்டும், அறமன்றங்கள், அலுவலகங்களில், தமிழ் வேண்டும் என்று தங்கள் உரிமைகளை வலுவாக கேட்டு நிலைநாட்டுவார்களோ அன்றுதான் தமிழும் வாழும். இக் கட்டுரையிலே ecology பற்றி கூறியிருப்பது கண்டு நான் மகிழ்ந்தேன். நுண்தொடர்புகளை தமிழர்கள் நன்கு அறிய வேண்டும். --செல்வா 02:33, 16 மார்ச் 2007 (UTC)
நல்ல சுட்டி, நல்ல கருத்துக்கள் செல்வா. தமிழ் நிலங்களில் நிச்சயம் ஒரு சமூக இயக்கத்தின் தேவைப்படுகிறது--Ravidreams 09:01, 16 மார்ச் 2007 (UTC)
நன்று! நன்று!!, நற்கீரனாரே--ஞானவெட்டியான் 15:24, 16 மார்ச் 2007 (UTC)
கருத்துக்களுக்கு நன்றி. உலகமயமாதல் சூழலில் தமிழர்களின் தனித்துவத்தை பேணுவதில் தமிழே அதிமுக்கிய கருவி. தமிழை முன்னிறுத்துவோர் பழமைக்குள் வாழ்வது என்றோ அல்லது மொழித் தீவரவாதிகள் என்றோ சிலர் சொல்வது அவ்வளவு பொருத்தமில்லை. பொதுவாக, தமிழர்கள் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்துள்ளார்கள் என்பது என் கணிப்பு. சிங்களம் தமிழ், இந்தி தமிழ், மலையாளம் தமிழ், சமஸ்கிரதம் தமிழ் என... எனவே தமிழை முன்னிறுத்துவது தமிழை மட்டும் முன்னிறுத்துவது என்று கருதப்படக்கூடாது. இது பலர் செய்யும் தப்புக் கணக்கு. இந்த தெரிவு எமக்கு முன் இல்லை என்றே சொல்லலாம்.
உலகமயமாதலை கண்டு நாம் பயப்பட தேவையில்லை. அது எமக்கு நல்ல ஆக்க ஊக்கங்கள் தரக்கூடிய ஒரு நிகழ்வு. ஆனால் அதை நாம் பிழையாக அணுகுவோமேயானால் அதன் கொடுரூமான முகம்களை சந்திக்க வேண்டி வரவேண்டு. இந்தியாவில் தமிழர்கள் உலகமயமாதலை அவர்களுக்கு இருக்கும் மொழி ரீதியான வெளித் தொடர்புகளை வைத்து நன்றாக பயன்படுத்தி கொள்ளலாம். பல பிற இந்திய மொழி மக்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை.
இந்தியத் தமிழர்களுக்கு உலகத் தமிழர்கள் ஒரு பலமே. தமிழர்களுக்கு தமிழ் பலம், ஒரு தொடர்பு பாலம், உலகை உணர ஒரு தனித்துவ வழி.
--Natkeeran 17:28, 16 மார்ச் 2007 (UTC)
/இது மூன்றாவது மொழிப் போராக குறிக்கப்படுகின்றது./
இது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகும். தமிழகத்தில் யாரும் இந்த இயக்கத்தை மதிப்பதே இல்லை. இது அரசியல் லாபத்துக்காகவும் சர்ச்சைகளை உருவாக்குதன் மூலம் சுய விளம்பரம் தேடுவதற்காக மட்டுமே உருவாக்கப்பட ஒரு அமைப்பாகவே பெரும்பாண்மையோரால் கருதப்படுகிறது(ஊடக கணிப்பு + ஏதோ எனக்கு தெரிஞ்ச வரைக்கும்). தனித்தமிழ் இயக்கத்துக்கும்' திராவிட இயக்கத்துக்கும் இருந்தாற் போல் பொது மக்கள் மத்தியில் இதற்கு ஆதரவு இல்லை. அனைத்தும் கட்சி சார்ந்த ஆதரவு தான். வெற்று சர்ச்சைகளை உருவாக்கி அதனால் தனிப்பட்ட அரசியல் செல்வாக்கை உயர்த்துவதற்காகவே இது உருவாக்கப்பட்டுள்ளது, அதற்கு மொழி ஒரு முகமூடி. மேற்கூறிய இயக்கங்களோடு இதை ஒப்பீடு செய்வதற்கு கூட தகுதியற்றது.
இப்ப கொஞ்ச நாளா எங்க போனாங்கன்னே தெரியல, இன்னொரு சர்ச்சை கிடைக்கல போல :-)
தயவு செய்து இது போன்ற மிகைப்படுத்தப்பட்ட கருத்துகளை நீக்க வேண்டுகிறேன். படிக்கறவங்க தமிழ்நாட்டுல ஏதோ அவங்களுக்கு ரொம்ப ஆதரவு இருக்கிற மாதிரி ஒரு Psedo-Image Create பண்ணிடும்
|
வினோத் 04:14, 29 டிசம்பர் 2007 (UTC)