டைபர் நதிக்கரை புனித மரியா கோவில்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
டைபர் நதிக்கரை புனித மரியா கோவில் Basilica of Our Lady's in Trastevere Basilica di Santa Maria in Trastevere (இத்தாலியம்) | |
---|---|
![]() டைபர் நதிக்கரை புனித மரியா கோவிலின் முகப்புத் தோற்றம் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | ![]() |
புவியியல் ஆள்கூறுகள் | 41°53′22″N 12°28′11″E / 41.88944°N 12.46972°E / 41.88944; 12.46972 |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
நிலை | இளம் பெருங்கோவில் |
தலைமை | யோசப் க்ளெம்ப் |
டைபர் நதிக்கரை புனித மரியா கோவில் (Basilica of Our Lady in Trastevere) என்பது அன்னை மரியாவின் வணக்கத்திற்கு உரோமை நகரில் கட்டப்பட்ட மிகப் பழமையான ஒரு வழிபாட்டிடம் ஆகும்.[1] இக்கோவிலின் (இத்தாலியம்: Basilica di Santa Maria in Trastevere) தரை வரைவும் சுவர்க் கட்டடமும் கி.பி. சுமார் 350ஆம் ஆண்டைச் சார்ந்தவை. இக்கோவிலில்தான் திருப்பலி ஒரு பொதுநிகழ்வாக முதன்முறையாக நடந்திருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.
கோவிலின் உள்ளே இருக்கின்ற ஆயர் இருக்கையின் மேல் உள்ள எழுத்துப்படி, இக்கோவில்தான் அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் கோவில். இதற்கு மாறாக, சிலர் மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் கோவில் புனித மரியா பெருங்கோவில் என்று கருத்துத் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், இக்கோவில் உரோமையில் அமைந்துள்ள மிகப்பழமையான கோவில்களுள் ஒன்று என்பதில் ஐயமில்லை. ஓய்வுபெற்ற போர்வீரர்களின் புகலிடமாக இருந்த "சிறப்பு உணவகம்" (இலத்தீன்: Taberna meritoria என்னும் விடுதி இவ்விடத்தில் பண்டைய உரோமையர் காலத்தில் இருந்தது. அந்த விடுதி இருந்த இடத்தில் கிறித்தவர்கள் கி.பி. 220 அளவில் ஒரு "வீட்டுக் கோவில் சபையை" (house-church) உருவாக்கினார்கள். அதற்கு முதலாம் கலிஸ்டஸ் (217-222) என்னும் திருத்தந்தை உதவினார்.
மேற்கூறிய உணவகத்தின் உடைமையாளர்கள் முதலில் அதைக் கிறித்தவர்களின் பயன்பாட்டுக்குக் கொடுக்க முன்வரவில்லை. அப்போது உரோமை மன்னர் செப்திமுஸ் செவேருஸ் என்பவர் தலையிட்டு, கிறித்தவ வழிபாட்டுக்காக அந்த உணவகத்தைக் கொடுத்தார். "எந்த முறையில் வழிபடுபவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருந்தால் அவர்களுக்கு அந்த இடத்தை ஒதுக்குவது முறையே" என்று மன்னர் கூறினார்.
திருத்தந்தை கலிஸ்டஸ் பெயருக்கு உரியதாக இருந்த அக்கிறித்தவக் கோவிலை கிபி. 340இல் முதலாம் ஜூலியுஸ் என்னும் திருத்தந்தை விரித்து, பெரிய அளவில் கிபி 340இல் கட்டினார். அவருடைய ஆதரவின் கீழ் விரிவாக்கப்பட்ட கோவிலுக்கு "ஜூலியுஸ் கோவில்" (titulus Iulii) என்னும் பெயர் வழங்கலாயிற்று.
மரியா கோவிலில் முதல் சீரமைப்புப்பணி 5ஆம் நூற்றாண்டிலும் 8ஆம் நூற்றாண்டிலும் நடந்தது.
திருத்தந்தை இரண்டாம் இன்னசெண்ட் காலத்தில் (1140-1143) மரியா கோவில் அதன் பழைய அடித்தளத்தின் மீதே மீண்டும் புதிதாகக்கட்டப்பட்டது. இரண்டாம் அனகிலேத்துஸ் என்பவர் 1130-1138 காலத்தில் எதிர்-திருத்தந்தையாக இருந்தார். அவர் இறந்ததும் அவரது உடல் டைபர் நதிக்கரை புனித மரியா கோவிலில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது.
திருத்தந்தை இரண்டாம் இன்னசெண்டுக்கு எதிராக எழுந்த எதிர்-திருத்தந்தையின் உடல் மரியா கோவிலில் அடக்கம் செய்யப்பட்டதை அவர் விரும்பவிலை. எனவே அக்கல்லறையையும் அதோடு கோவிலையும் இன்னசெண்டு பிரித்தெடுத்தார். அனிசேட்டஸ் அடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் தமக்கென்று ஒரு கல்லறை எழுப்பினார் திருத்தந்தை இன்னசெண்ட்.
மரியா கோவிலின் உள்ளே எழுகின்ற அயோனிய தூண்கள் (ionic capitals)[2] மிகுந்த கலைவேலைப்பாடு கொண்டவை. அத்தூண்கள் மன்னர் கரக்கால்லாவின் பொதுக்குளியகம் (Baths of Caracalla)[3] அல்லது, ஜனிக்குலம் குன்றிலிருந்த ஐசிஸ் (Isis)[4] கடவுளின் கோவிலிலிருந்து வந்திருக்க வேண்டும். அத்தூண்களில் செதுக்கப்பட்டிருந்த முகங்கள் ஐசிஸ், செரப்பிஸ், ஹார்ப்பொக்ராட்டெஸ் ஆகிய தெய்வங்களுக்குரியது என்று 19ஆம் நூற்றாண்டில் கலை வரலாற்றாசிரியர்கள் கண்டுபிடித்தனர். இத்தகவலை அறிந்த திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் பிற சமய தெய்வங்களின் முகங்களைத் தூணிலிருந்து அகற்றிவிட 1870இல் ஆணை பிறப்பித்தார்.
இன்றைய மரியா கோவிலின் முன்னோடியான கோவில் நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டது. அந்தப் பழைய கோவிலோ அதற்கு முன்னரே இருந்த "உடைமைக் கோவிலின்" (titular church) மேல் எழுந்தது. இந்த மரியா கோவில் 222இல் இறந்த திருத்தந்தை கலிஸ்துசுக்கு "உடைமையாக" இருந்தது என்று "திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) கூறுகிறது. அத்திருத்தந்தையின் மீபொருள்கள் இக்கோவிலின் பீடத்துக்கு அடியில் வைக்கப்பட்டு வணங்கப்படுகின்றன.
பரோக் கலைப்பாணியில் புதுமையான முறையில் அமைந்தது இச்சிறுகோவில். அதன் கீழ்ப்பகுதி சிறிது இருளடைந்து உள்ளது. மேலே குவிமாடம் எழுகின்றது. குவிமாடத்தின் நடு உச்சியில் ஒளி பாயும் கண் போன்ற துளை உள்ளது. அதிலிருந்து நான்கு வானதூதர் வெளிப்படுவது தெரிகிறது. அவர்கள் ஒரு கோவில் கட்டடத்தைத் தாங்கிநிற்கின்றனர். குவிமாடம் முழுவதும் ஒளியால் நிறைந்துள்ளது. ஒளி வருகின்ற சாளரங்கள் பார்வையாளரின் கண்களுக்கு மறைந்துள்ளன. இவ்வாறு புதுமையான முறையில் அமைந்துள்ளது இச்சிறுகோவில்.
மரியா கோவிலில் புனித அப்போலோனியா என்பவரின் தலைப்பகுதியின் மீபொருள் பாதுகாக்கப்படுகிறது.
இயேசு சிலுவையில் தொங்கியபோது அவருக்கு கடற்காளானில் புளித்த திராட்சை இரசத்தைத் தோய்த்துக் குடிக்கக் கொடுத்தார்கள் என்னும் செய்தி நற்செய்தி நூல்களில் உள்ளது (காண்க: மத்தேயு 27:48; மாற்கு 15:36; யோவான் 19:29). அந்தக் கடற்காளனின் ஒரு பகுதி மீபொருளாக மரியா கோவிலில் பாதுகாக்கப்படுகிறது.
மேலும், மரியா கோவிலில் திருத்தந்தை முதலாம் கலிஸ்டஸ், இரண்டாம் அனகிலேத்துஸ், திருத்தந்தை முதலாம் கலிஸ்டஸ் ஆகியோரின் மீபொருள்கள் பாதுகாக்கப்படுகின்றன.
கிறித்தவக் கோவில்கள் (உரோமை) | |
---|---|
புனித பேதுரு பெருங்கோவில் · புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பெருங்கோவில் · புனித மரியா பெருங்கோவில் · புனித பவுல் பெருங்கோவில் · புனித இலாரன்சு பெருங்கோவில் · மினெர்வா மேல் புனித மரியா கோவில் · புனித பேதுரு சங்கிலிக் கோவில் · வானதூதரின் புனித மரியா கோவில் · இயேசு கோவில் · மூன்று ஊற்று புனித பவுல் கோவில் · வானக பீ்ட புனித மரியா கோவில் · புனித இஞ்ஞாசியார் கோவில் · டைபர் நதிக்கரை புனித மரியா கோவில் · நவோனா வெளியக புனித ஆக்னெஸ் கோவில் · புனிதர்கள் பெர்ப்பேத்துவா, பெலிசித்தா கோவில் · பன்னிரு திருத்தூதர் கோவில் · இறையன்பு மரியா கோவில் · புனித பிலிப்பு நேரி கோவில் · எருசலேம் திருச்சிலுவைக் கோவில் · பள்ளத்தாக்கு புனித அந்திரேயா கோவில் · புதுக் கோவில் · மறைச்சாட்சியரின் மரியா கோவில் · புனித எஸ்தாக்கியார் கோவில் · மலைமேல் மூவொரு கடவுள் கோவில் · மக்களின் அன்னை மரியா கோவில் · புனிதர் கோஸ்மோ, தமியானோ கோவில் · மொந்தோரியோ புனித பேதுரு கோவில் · டைபர் நதிக்கரை புனித செசிலியா கோவில் · கோஸ்மதின் புனித மரியா கோவில் · திருப்படிகள் கோவில் · புனித கிளமெண்ட் கோவில் · புனித ஸ்தேவான் வட்டக் கோவில் · வெற்றி அன்னை மரியா கோவில் · புனித செபஸ்தியார் கோவில் · |