சைவ நெறி இலக்கியங்கள்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடும் சைவ சமயத்தினைப் பற்றிய இலக்கியங்கள் சைவ நெறி இலக்கியங்களாகும். இவை சைவ நெறிப் பற்றியும், சிவபெருமான் பற்றியும் புகழ்ந்து பாடவும், சைவ நெறியை பரப்பவும் இயற்றப்பட்டன. பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டு முதல் 12-ஆம் நூற்றாண்டு வரையான காலங்களில் சிற்றிலக்கியம், பெருங்காப்பியம், சைவப் பனுவல்கள் என்று பல சைவ இலக்கியங்கள் இயற்றப்பட்டன. பொ.ஊ. 650 காலப்பகுதி தொடங்கி, 550 ஆண்டு காலம் தமிழ்மொழியைச் சைவ சமயமே ஆட்சி செய்தது என முனைவர் இரா.செல்வகணபதி குறிப்பிடுகிறார்.[1]
ஔவையார், குமரகுருபரர், சிவப்பிரகாசர், உலகநாதர், நாயன்மார்கள், நால்வர் போன்றோர் சைவ சமயத்தின் பெரும் நூல்கள் இயற்றியவர்கள்.
பல்லவர் காலத்திலும், அதன் பிறகும் இயற்றப்பட்ட சைவ இலக்கியங்களின் தொகுப்பினை பன்னிரு திருமுறைகள் என்கிறோம். இந்த திருமுறையை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட இலக்கிய நூல்கள் திருமுறை சார்ந்த நூல்களாக அறியப்படுகின்றன.
உந்தி களிறோ டுயர்போதம் சித்தியார்பிந்திருபாஉண்மைப் பிரகாசம்-வந்தஅருள்பண்புவினாபோற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடுஉண்மைநெறிசங்கற்ப முற்று
எனும் வெண்பா மூலம் சைவ சிந்தாந்த நூல்கள் பதினான்கு என்பதை அறியலாம். [2]
1. சைவ இலக்கியங்களின் தொகுப்பு